ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
லட்சுமிமேனன் சினிமாவுக்கு வந்து பல ஆண்டுகளாகி விட்டது. என்றாலும், இதுவரை எந்த நடிகர்களுடனும் அவர் சகஜமாக பழகியதில்லை. படப்பிடிப்பு தளத்தில் மரியாதை நிமித்தமாக சில வார்த்தைகளை மட்டுமே உதிர்ப்பவர், அத்தோடு நழுவிச்சென்று விடுவார். அதனால்தான், பெரிய அளவில் கிசுகிசு வலையில் சிக்காமல் தப்பித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், சிப்பாய் படத்தில் கடல் கெளதமுக்கு ஜோடியாக நடித்து வரும் லட்சுமிமேனன் அவருடன் மணிக்கணக்கில் கடலை போடுவதாக ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறது. அப்படியென்றால் இவர்களுக்கிடையேயும் ஏதாவது காதல் கீதல் என்று சத்தமில்லாமல் பற்றிக்கொண்டுள்ளதோ? என்று கெளதமிடம் கேட்டால், அவசர அவசரமாக அப்படியேதும் இல்லை என்று மறுக்கிறார்.
மேலும், என்னுடன் ஜோடி சேர்ந்த முதல் பட நடிகை துளசி, சிப்பாயில் நடிக்கும் லட்சுமிமேனன் இருவருமே ஒரே வயதுடையவர்கள். நானும் அவர்கள் செட் என்பதால், ஸ்பாட்டில் நடிகர்-நடிகை என்பதை மறந்து விட்டு சக நண்பர்களைப்போலவே பழகினோம். அதில் லட்சுமிமேனன் ரொம்ப இயல்பாக பழகக்கூடியவர். அவரிடம் பேசினால் போரடிக்கவே செய்யாது. அந்த அளவுக்கு ஜாலியாக பேசுவார்.
ஆனால், நாங்கள் சினிமாவைப்பற்றி பேசுவதை விட, பள்ளிக்கூடத்தில் நடந்த சுவராஸ்யமான விசயங்களைப்பற்றித்தான் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வோம். ஆனால், இதை சில கண்கள் தவறான கண்ணோட்டத்திலும் பார்ப்பதுண்டு. மடியில் கனமில்லாதபோது நாங்கள் எதற்காக பயப்பட வேண்டும். அதனால் எங்களது ப்ரண்ட்ஷிப் தொடர்கிறது என்கிறார் லட்சுமிமேனன்.