ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
நடிகர் விஜய், தன்னை வைத்து ஆரம்பகாலங்களில் படம் தயாரித்த 5 தயாரிப்பாளர்களுக்கு(இன்று நலிவடைந்த நிலையில்...) தலா ரூ.5 லட்சம் வழங்கினார். இந்த விழா சென்னை, ஜி.ஆர்.டி கிராண்ட் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், பத்திரிகையாளர்களிடம் பேசிய விஜய், தயாரிப்பாளர்கள் தாய் மாதிரி. ஒரு பட தயாரிப்பின் போது 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்து, அவர்களுக்கு உண்ண உணவு, உறங்க இடம் ஏற்பாடு செய்து, என் போன்ற நடிகர்களையும், தொழிலாளிகளையும், தொழில்நுட்பகலைஞர்களையும் தாய் மாதிரி தன் தேவையை அறிந்து கவனித்து கொள்பவர்கள்.
எனது ஆரம்பகாலங்களில் என்னை வைத்து படம் செய்த சில தயாரிப்பாளர்கள் இன்று ஏதோ ஒரு வகையில் கஷ்டத்தில் இருப்பதாக அறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்று விரும்பினேன். இப்படியொரு எண்ணம் ஏன் முன்னமே உங்களுக்கு தோன்றவில்லை என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். அது ஏன் இப்போது தோன்றியது, எதற்காக தோன்றியது எல்லாம் எனக்கு தெரியாது, நல்ல விஷயம் எப்போது தோன்றினால் என்ன, நல்லது செய்தால் சரி என எண்ணி, என்னை ஆரம்ப காலத்தில் தூக்கிவிட்ட இவர்களுக்கு இன்று உதவினேன்.
இந்த விழாவை இந்தளவு கூட நடத்த நான் விரும்பவில்லை, எளிமையாக வீட்டிலோ, அலுவலகத்திலோ நடத்த விரும்பினேன், ஆனாலும் இதைப்பார்த்து மற்ற நடிகர்களும், தயாரிப்பாளர்களும் உதவ முன்வருவார்கள் என்ற நல்லணத்தில் தான் மீடியா மற்றும் பத்திரிகை நண்பர்களை அழைத்து இப்படி ஒரு விழாவாக நடத்தி உதவியுள்ளேன். இரண்டு படம் வெற்றிபெற்றால் இரண்டு மடங்கு நம்பிக்கை வரும். இரண்டு படம் தோல்வியடைந்தால் இரண்டு மடங்கு அனுபவம் கிடைக்கும். அந்த அனுபவத்தை கருத்தில் கொண்டு இவர்கள் தொடர்ந்து படம் பண்ண வேண்டும் என்பதே எனது ஆசை என்றார்.
விழாவில், விஜய் நடித்த வசந்தவாசல் படத்தை தயாரித்த எம்.ஆர்., ராஜாவின் பார்வையிலேயே படத்தை தயாரித்த செளந்தர், ஒன்ஸ்மோர் தயாரிப்பாளர் சி.வி.ராஜேந்திரன், விஷ்ணு படம் எடுத்த மறைந்த ஆஸ்கர் எம்.பாஸ்கரின் மகன், பாலாஜி பிரபு, மின்சாரக்கன்னா படத்தை தயாரித்த மறைந்த கே.ஆர்.ஜி.யின் மனைவி சாந்தா, உள்ளிட்ட 5 பேருக்கு நிதியுதவி வழங்கினார். இவ்விழாவில் ஜில்லா பட தயாரிப்பாளர் சூப்பர் குட் பிலிம்ஸ் செளத்ரி, இயக்குநர் நேசன், இசையமைப்பாளர் இமான் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.
நாளைமறுநாள் ஜில்லா படத்தின் பாடல்கள், விஜய் ரசிர்களின் காதுகளுக்கு வந்து சேரவுள்ள நிலையில், இன்றே இந்த நல்ல தருணத்தில் ஜில்லா படத்தின் ஆடியோ வெளியீட்டை ரொம்ப எளிமையாக செய்ய விரும்புவதாக கூறி, விஜய், ஆர்.பி.செளத்ரி, இமான், நேசன் உள்ளிட்டோர், ஜில்லா படத்தின் ஆடியோவை வெளியிட, ஐந்து நலிவடைந்த தயாரிப்பாளர்களும் பெற்றுக் கொண்டனர்.