Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தொழிலதிபர் மீது கொடுத்த செக்ஸ் புகாரை வாபஸ் பெற்றார் ராதா: கேட்ட பணம் செட்டிலாகிவிட்டதாக தகவல்

19 டிச, 2013 - 13:01 IST
எழுத்தின் அளவு:

சுந்தரா டிராவல்ஸ் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதா. அதன்பிறகு சில படங்களில் நடித்து விட்டு சினிமாவில் இருந்து விலகி விட்டார். திருவல்லிக்கேணியை சேர்ந்த தொழிலதிபர் பைசூலுடன் தாலிகட்டாத மனைவியாக வாழ்ந்தார். இந்த நிலையில் திடீரென அவர் மீது கமிஷனரிடம் புகார் கூறினார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னுடன் 4 வருடம் வாழ்ந்ததாகவும், 50 லட்சம் மதிப்புள்ள பணம், நகையை பிடுங்கி கொண்டதாகவும் புகார் கூறினார்.

இந்த புகார் வழக்காக கோர்ட்டுக்கு வந்தது. பைசூல் முன்ஜாமின் கேட்டு கொடுத்த மூன்று மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. அவரை கைது செய்து ஆஜர்படுத்தும்படி கோர்ட் போலீசுக்கு உத்தரவிட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கமிஷனர் அலுவலகம் வந்த ராதா "போலீஸ் பைசூலுக்கு ஆதரவாக செயல்படுகிறது. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு தண்டனை வாங்கித் தராமல் ஓய மாட்டேன்" என்றெல்லாம் ஆவேசமாக சொல்லிவிட்டுப் போனர்.

இந்த நிலையில் நேற்று (டிசம்பர் 18) இரவு ராதா திடீரென்று வடபழனி காவல் நிலையத்துக்கு வந்தார். கையோடு கொண்டு வந்திருந்த மனுவை அங்கிருந்த போலீசாரிடம் கொடுத்தார். பைசூல் மேல் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும், அவர் மீதான நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். போலீசார் மனுவை பெற்றுக் கொண்டாலும் வழக்கு கோர்ட்டில் இருப்பதால் நீங்கள் கோர்ட்டுக்குத்தான் செல்ல வேண்டும் என்று அவரிடம் கூறினர். இதனால் அவர் வேகமாக புறப்பட்டு சென்று விட்டார்.

"என்ன இருந்தாலும் பைசூல் என் கணவர். அவர் எத்தனை நாளைக்குத்தான் ஓடி ஒளிவார். அவர் கஷ்டப்படுவதை என் மனது கேட்கவில்லை. அதுதான் புகாரை வாபஸ் பெற்றுவிட்டேன். இதற்கு மேல் இதுபற்றி பேசப்போவதில்லை" என்று கூறியிருக்கிறார் ராதா. 50 லட்சம் கேட்டுத்தான் ராதா வழக்கு போட்டிருந்தார். அந்தப் பணத்தை பைசூல் ராதாவுக்கு கொடுத்து பைசல் செய்து விட்டதாகவும், அதனாலேயே ராதா புகாரை வாபஸ் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Mohandhas - singapore,சிங்கப்பூர்
20 டிச, 2013 - 09:53 Report Abuse
Mohandhas இதுதான் நவீன வி....ம்
Rate this:
அப்பு - மதுரை ,இந்தியா
19 டிச, 2013 - 23:01 Report Abuse
அப்பு நல்ல பிழைப்பு.....என்ன கருமாந்திரமோ போ....
Rate this:
தலைநகர தமிழன் - TAMILNADU ,இந்தியா
19 டிச, 2013 - 17:41 Report Abuse
தலைநகர தமிழன் இப்போதான் கணவரா ?
Rate this:
Prakash - covai  ( Posted via: Dinamalar Android App )
19 டிச, 2013 - 17:07 Report Abuse
Prakash உங்க பப்ளிசிட்டிக்காக என்னவேனாlum pannalam.
Rate this:
Dr.Vijay SSLC fail - thirupachi ,இந்தியா
19 டிச, 2013 - 13:17 Report Abuse
Dr.Vijay SSLC fail பணம் பத்தும் செய்யும்
Rate this:
அப்பு - மதுரை ,இந்தியா
19 டிச, 2013 - 23:02Report Abuse
அப்புபணம் பத்தும் செய்யும் அது 2000 க்கு முன்னால,,,,இப்ப பத்து இல்ல பல லகர கோடிகளையும் செய்யும்.......
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in