ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சுந்தரா டிராவல்ஸ் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதா. அதன்பிறகு சில படங்களில் நடித்து விட்டு சினிமாவில் இருந்து விலகி விட்டார். திருவல்லிக்கேணியை சேர்ந்த தொழிலதிபர் பைசூலுடன் தாலிகட்டாத மனைவியாக வாழ்ந்தார். இந்த நிலையில் திடீரென அவர் மீது கமிஷனரிடம் புகார் கூறினார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னுடன் 4 வருடம் வாழ்ந்ததாகவும், 50 லட்சம் மதிப்புள்ள பணம், நகையை பிடுங்கி கொண்டதாகவும் புகார் கூறினார்.
இந்த புகார் வழக்காக கோர்ட்டுக்கு வந்தது. பைசூல் முன்ஜாமின் கேட்டு கொடுத்த மூன்று மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. அவரை கைது செய்து ஆஜர்படுத்தும்படி கோர்ட் போலீசுக்கு உத்தரவிட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கமிஷனர் அலுவலகம் வந்த ராதா "போலீஸ் பைசூலுக்கு ஆதரவாக செயல்படுகிறது. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு தண்டனை வாங்கித் தராமல் ஓய மாட்டேன்" என்றெல்லாம் ஆவேசமாக சொல்லிவிட்டுப் போனர்.
இந்த நிலையில் நேற்று (டிசம்பர் 18) இரவு ராதா திடீரென்று வடபழனி காவல் நிலையத்துக்கு வந்தார். கையோடு கொண்டு வந்திருந்த மனுவை அங்கிருந்த போலீசாரிடம் கொடுத்தார். பைசூல் மேல் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும், அவர் மீதான நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். போலீசார் மனுவை பெற்றுக் கொண்டாலும் வழக்கு கோர்ட்டில் இருப்பதால் நீங்கள் கோர்ட்டுக்குத்தான் செல்ல வேண்டும் என்று அவரிடம் கூறினர். இதனால் அவர் வேகமாக புறப்பட்டு சென்று விட்டார்.
"என்ன இருந்தாலும் பைசூல் என் கணவர். அவர் எத்தனை நாளைக்குத்தான் ஓடி ஒளிவார். அவர் கஷ்டப்படுவதை என் மனது கேட்கவில்லை. அதுதான் புகாரை வாபஸ் பெற்றுவிட்டேன். இதற்கு மேல் இதுபற்றி பேசப்போவதில்லை" என்று கூறியிருக்கிறார் ராதா. 50 லட்சம் கேட்டுத்தான் ராதா வழக்கு போட்டிருந்தார். அந்தப் பணத்தை பைசூல் ராதாவுக்கு கொடுத்து பைசல் செய்து விட்டதாகவும், அதனாலேயே ராதா புகாரை வாபஸ் பெற்றதாகவும் கூறப்படுகிறது.