ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வேட்டைக்காரன் படத்தில் விஜய்-அனுஷ்கா ஆடிப்பாடும், என் உச்சி மண்டையிலே சுர்றுங்குதே, நினைத்தாலே இனிக்கும் படத்தில், பன்னாரஸ் பட்டுகட்டி, சகுனியில், போட்டது பத்தல மாப்புள்ள, ஹரிதாஸ் படத்தில், அன்னையின் வயிற்றில் கலையாமல் பிறந்தாயே உள்பட ஏராளமான ஹிட் பாடல்களை எழுதியவர் பாடலாசிரியர் அண்ணாமலை.
யுவன்ஷங்கர்ராஜா, ஜி.வி.பிரகாஷ், விஜய்ஆண்டனி என முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் தொடர்ந்து பாடல் எழுதி வரும் இவர், தற்போது சுந்தர்.சி இயக்கி வரும் அரண்மனை படத்தில் ஒரு மண்வாசனை பாடல் எழுதியிருக்கிறார். கதைப்படி நகரத்தில் வசித்து வரும் வினய்-ஆண்ட்ரியா இருவரும் தங்களது சொந்த கிராமத்துக்கு போகும் சூழலில் அமைந்த அந்த பாடல்,
கத்திப்பார்வைக்காரி உன் கண்ணுரெண்டும் ஊசி,
குத்தி கத்தி என்னை நீ கொல்லாதே! -என்று தொடங்குகிறாம்.
இப்பாடலின் சரணத்தில்,
தாத்தா பாட்டி சொன்ன கதை எல்லாம் நம்ம நெஞ்சோட,
ஊரவிட்டு போனாலுந்தான் உசிரு இந்த மண்ணோட!
ஆண்டு நூறு ஆனபோதும், சொந்த மண்ண மிதிச்சா,
சொர்க்கம் வேற எது இருக்கு...!
-என்று கதையின் சூழலுக்கேற்ப பரத்வாஜ்யின் இசையில் எழுதியுள்ளாராம் அண்ணாமலை. இந்த பாடலின் வரியைக்கேட்டு மனம் நெகிழ்ந்து போனாராம் சுந்தர்.சி. இந்த பாடல் வரிகள் கதைக்கு பொருத்தமாக இருப்பதோடு, எனக்கும் சொந்த ஊர் ஞாபகங்களை மனக்கண்ணில் கொண்டு வருகிறது. அதனால், படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் சொந்த மண்ணின் மகத்துவத்தை சொல்வதாக இப்பாடல் அமையும் என்று சொல்லி, அண்ணாமலையை பாராட்டினாராம். இந்த பாடலில் 2000-க்கும் அதிகமானவர்களை கிராமத்து மனிதர்களாக உலவ விட்டு பிரமாண்டமாகவும் படமாக்கியுள்ளாராம் சுந்தர்.சி.