ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வெளுத்துக்கட்டு படத்தில் தமிழுக்கு இறக்குமதியானவர் அருந்ததி. அப்படத்தில் வரிந்து கட்டிக்கொண்டு நடித்தார். என்றாலும், படத்தின் தோல்வியால் இன்னமும் பின்தங்கியே இருக்கிறார். அதோடு, முதல் படத்திலேயே எஸ்.ஏ.சந்திரசேகரனின் படத்தில் நடிக்கிறோம். அதனால் அவரை வைத்தே அவர் மகன் விஜய்யுடனும் அடுத்து ஜோடி சேர்ந்து விடலாம் என்பதும் அருந்ததியின் அப்போதைய கனவாக இருந்தது.
ஆனால், அவரால் விஜய் படத்தில் ஒரு தங்கை வேடத்தில் நடிப்பதற்குகூட வாய்ப்புகள் அமையவில்லை. அதனால், பின்னர் அந்த ஆசைகளை மூட்டைகட்டி வைத்துவிட்டு கிடைக்கிற வாய்ப்புகளை பயன்படுத்தத் தொடங்கிய அருந்ததிக்கு இப்போது வீ.சேகர் தனது மகன் காரல் மார்க்ஸை வைத்து இயக்கியுள்ள சரவண பொய்கை படத்தில் நாயகி வேடம் கிடைத்திருக்கிறது.
அதனால், தனது நடிப்பில் இன்னமும் வெளிவராமல் இருக்கும் படங்களையெல்லாம் மறந்து விட்டு இப்படத்தின் மீது முழு நம்பிக்கையையும் விதைத்து அறுவடைக்காக காத்திருக்கிறார் அருந்ததி. குடும்ப பின்னணியில் உருவாகியிருக்கும் இப்படத்தில் காரல் மார்க்ஸின் காதலியாக நடித்தபோதும், செண்டிமென்ட் காட்சிகளிலும் நடித்திருக்கிறேன். அதனால், இந்த படத்திற்கு பிறகு என் மீது நல்லதொரு குடும்ப இமேஜ் விழும் என்று சொல்லும் அருந்ததி. இனி தமிழ் சினிமாவே வேண்டாம். தாய்மொழியான கன்னடத்துக்கே சென்று விடுவோம் என்று நான் முடிவெடுத்த நேரம், இந்த படம்தான் எனக்கு நம்பிக்கை கொடுத்து என்னை கோடம்பாக்கத்தில் நிறுத்தியுள்ளது என்கிறார்.