Advertisement

சிறப்புச்செய்திகள்

சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பைசூலை ஏன் கைது செய்யவில்லை? போலீஸ் மீது நடிகை ராதா காட்டம்!

12 டிச, 2013 - 14:03 IST
எழுத்தின் அளவு:

"சினிமா பைனான்சியர் பைசூல், சாட்சிகளை அழிப்பதுடன், என் மீது பொய் புகார் கூற தயாராகி வருகிறார்; அவருக்கு யார் உதவுகின்றனர் என்பது தெரியவில்லை. 2 முறை, முன்ஜாமின் மனு தள்ளுபடியான போதும், இதுவரை போலீசார் அவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என, நடிகை ராதா, போலீசாருக்கு எதிராக கேள்வி எழுப்பியுள்ளார்.

"சுந்தரா டிராவல்ஸ், அடாவடி உள்ளிட்ட படங்களில், கதாநாயகியாக நடித்த ராதா, நவ., 22ம் தேதி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், "சென்னை, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த, சினிமா பைனான்சியர், பைசூல் என்பவர், 2008ல், வைர வியாபாரி என, அறிமுகமானார். திருமணம் செய்து கொள்வதாக கூறியதால், ஐந்தாண்டுகள் கணவன், மனைவியாக வாழ்ந்தோம். 50 லட்சம் ரூபாய் வரை பறித்துக் கொண்டு, மோசடி செய்துவிட்டார். படுக்கை அறை காட்சிகளை வீடியோவில் பதிவு செய்து வெளியிட போவதாக மிரட்டி வருகிறார் என, கூறியிருந்தார். இந்த புகார், தி.நகர் துணை கமிஷனருக்கு மாற்றப்பட்டு, வடபழனி போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையில், முன்ஜாமின் கேட்டு, சென்னை செஷன்ஸ் கோர்ட்டில், பைசூல் மனு தாக்கல் செய்தார்; மனு தள்ளுபடியானது. இந்நிலையில் நேற்று, ராதா, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனரிடம் புகார் கொடுத்தார்.

இதுகுறித்து, ராதா கூறியதாவது: நான் ஏற்கனவே அளித்த புகாரின் மீது இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாததால், அதன் மீது நடவடிக்கையை விரைவுபடுத்தும்படி கூறியுள்ளேன். பைசூல் மீது, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. அந்த, எப்.ஐ.ஆர்., நகலை கூட, இன்னும் எனக்கு தரவில்லை. அவரை, போலீசார் ஏன் கைது செய்யவில்லை என்பது தெரியவில்லை. பைசூல் தற்போது, சாட்சிகளை கலைக்கவும், என் மீது பொய் புகார் கொடுக்கவும் தயாராகி வருகிறார். இதுகுறித்து, அதிகாரியிடம் மனு அளித்துள்ளேன்; அவரும், "பைசூலை தேடி வருகிறோம்; அவரை விரைவில் கைது செய்வோம் என, கூறியுள்ளார். இவ்வாறு, நடிகை ராதா கூறினார்.

இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள், பைசூலுடன் இணைந்து செயல்படுவதாக, தகவல்கள் வெளியாகின. எனவே, "விசாரணை அதிகாரிகளை மாற்ற கோரியுள்ளீர்களா? என, கேட்டபோது, ""இங்கு வந்தபோது, தி,நகர் பகுதியில் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிந்தேன்; அது, துறை ரீதியான நடவடிக்கை; நான் ஒன்றும் கூற முடியாது, என, ராதா தெரிவித்தார்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

தலைநகர தமிழன் - TAMILNADU ,இந்தியா
14 டிச, 2013 - 18:57 Report Abuse
தலைநகர தமிழன் கைது செய்யாமல் இருக்க பைசூல் சம்மந்த பட்டவர்களுக்கு ரகசியமாக ஏதாவது பைசல் பண்ணியிருப்பார்
Rate this:
LAX - Trichy,இந்தியா
13 டிச, 2013 - 15:12 Report Abuse
LAX இந்த ராதாவா..? இப்படி குழப்பங்கள் வரும்போது பெயர்களைத் தகுந்த அடைமொழியுடன் வெளியிடுங்களேன்..
Rate this:
தலைநகர தமிழன் - TAMILNADU ,இந்தியா
14 டிச, 2013 - 18:59Report Abuse
தலைநகர தமிழன் இவர் புது சுந்தரா டிராவல்ஸ் ராதா ,பழைய அலைகள் ஓய்வதில்லை ராதா இல்லை...
Rate this:
தலைநகர தமிழன் - TAMILNADU ,இந்தியா
14 டிச, 2013 - 18:59Report Abuse
தலைநகர தமிழன் நல்ல வேளை நீங்க எம் ஆர் ராதாவா என்று கேட்காமல் போனீர்களே...
Rate this:
LAX - Trichy,இந்தியா
16 டிச, 2013 - 12:02Report Abuse
LAXஹலோ.. முதல் பதில் ஓ.கே.// அதான் நடிகை ராதான்னு போட்டுட்டாங்கல்ல.... அப்புறம் ஏன் இந்த 2வது விளக்கம்..?...
Rate this:
அப்பு - மதுரை ,இந்தியா
12 டிச, 2013 - 15:21 Report Abuse
அப்பு யாரை தான் நம்புவதோ.......
Rate this:
kalai - udm  ( Posted via: Dinamalar Android App )
12 டிச, 2013 - 15:09 Report Abuse
kalai சந்தனம் பூசியசெண்பகத்துக்கு சங்கடம்வந்தி்ருச்சே
Rate this:
அப்பு - மதுரை ,இந்தியா
12 டிச, 2013 - 14:42 Report Abuse
அப்பு சார் யாரையுமே நம்பப்படாது.....எல்லாரும் பிசினஸ் நிமித்தமா தெளிவா வாழ்க்கைய ஒட்டிண்டு இருக்காள்...நாம தான் வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பி புகழ்கிறோம்..உள்ளே போயி பாத்தால் தான் தெரிகிறது எவ்வளவு கழிசடைகளுக்கு இடையே பலர் வாழ்கையை ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள் என்று...தொழில் நட்பு கொடுக்கல் வாங்கல் என்று வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும்போது தான் எல்லோருடைய உண்மை முகங்கள் தெரிகிறது...ஹும்ம்.......
Rate this:
LAX - Trichy,இந்தியா
13 டிச, 2013 - 15:14Report Abuse
LAXஅதனால்தான் நான் எப்போதும் சொல்வேன், பண்பாடு கலாச்சாரம் என்றெல்லாம் எல்லா விஷயங்களுக்குமே கூப்பாடு போடக்கூடாது என்று.. ஆமா.. என்னாச்சு அப்பு, பாஷையெல்லாம் புதுசா இருக்கு..?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in