சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
"சினிமா பைனான்சியர் பைசூல், சாட்சிகளை அழிப்பதுடன், என் மீது பொய் புகார் கூற தயாராகி வருகிறார்; அவருக்கு யார் உதவுகின்றனர் என்பது தெரியவில்லை. 2 முறை, முன்ஜாமின் மனு தள்ளுபடியான போதும், இதுவரை போலீசார் அவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என, நடிகை ராதா, போலீசாருக்கு எதிராக கேள்வி எழுப்பியுள்ளார்.
"சுந்தரா டிராவல்ஸ், அடாவடி உள்ளிட்ட படங்களில், கதாநாயகியாக நடித்த ராதா, நவ., 22ம் தேதி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், "சென்னை, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த, சினிமா பைனான்சியர், பைசூல் என்பவர், 2008ல், வைர வியாபாரி என, அறிமுகமானார். திருமணம் செய்து கொள்வதாக கூறியதால், ஐந்தாண்டுகள் கணவன், மனைவியாக வாழ்ந்தோம். 50 லட்சம் ரூபாய் வரை பறித்துக் கொண்டு, மோசடி செய்துவிட்டார். படுக்கை அறை காட்சிகளை வீடியோவில் பதிவு செய்து வெளியிட போவதாக மிரட்டி வருகிறார் என, கூறியிருந்தார். இந்த புகார், தி.நகர் துணை கமிஷனருக்கு மாற்றப்பட்டு, வடபழனி போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையில், முன்ஜாமின் கேட்டு, சென்னை செஷன்ஸ் கோர்ட்டில், பைசூல் மனு தாக்கல் செய்தார்; மனு தள்ளுபடியானது. இந்நிலையில் நேற்று, ராதா, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனரிடம் புகார் கொடுத்தார்.
இதுகுறித்து, ராதா கூறியதாவது: நான் ஏற்கனவே அளித்த புகாரின் மீது இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாததால், அதன் மீது நடவடிக்கையை விரைவுபடுத்தும்படி கூறியுள்ளேன். பைசூல் மீது, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. அந்த, எப்.ஐ.ஆர்., நகலை கூட, இன்னும் எனக்கு தரவில்லை. அவரை, போலீசார் ஏன் கைது செய்யவில்லை என்பது தெரியவில்லை. பைசூல் தற்போது, சாட்சிகளை கலைக்கவும், என் மீது பொய் புகார் கொடுக்கவும் தயாராகி வருகிறார். இதுகுறித்து, அதிகாரியிடம் மனு அளித்துள்ளேன்; அவரும், "பைசூலை தேடி வருகிறோம்; அவரை விரைவில் கைது செய்வோம் என, கூறியுள்ளார். இவ்வாறு, நடிகை ராதா கூறினார்.
இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள், பைசூலுடன் இணைந்து செயல்படுவதாக, தகவல்கள் வெளியாகின. எனவே, "விசாரணை அதிகாரிகளை மாற்ற கோரியுள்ளீர்களா? என, கேட்டபோது, ""இங்கு வந்தபோது, தி,நகர் பகுதியில் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிந்தேன்; அது, துறை ரீதியான நடவடிக்கை; நான் ஒன்றும் கூற முடியாது, என, ராதா தெரிவித்தார்.