ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சென்னை நகரின் சுவர்களில் செய்து வந்த போஸ்டர் புரட்சியினால் தமிழ் சினிமாவிற்குள் வந்தவர் அந்த பவர் நடிகர். அதோடு தான் எங்கு சென்றாலும் அரசியல்வாதிகளைப்போன்று லாரியில் ஆட்களை கூட்டிச்சென்றும் பில்டப் கொடுத்து வந்த அவர், அந்த லட்டு படத்திற்கு பிறகு கோலிவுட்டின் பிரதான காமெடியன் ரேஞ்சுக்கு பேசப்பட்டார். ஆனால், அவரது வளர்ச்சி எக்குத்தப்பாக சென்று கொண்டிருந்தபோது அவர் செய்த மோசடி காரணமாக சிறைக் கம்பிகளை எண்ணச்சென்றுவிட்டார். இதனால் பவர் நடித்த சில படங்களுக்கு வேறு காமெடியன்கள் ஒப்பந்தமாகினர்.
இந்த நிலையில், பிரமாண்ட இயக்குனரின் படத்தில் ஒரு ரோபோ வேடத்தில் நடித்து வந்த பவர், அந்த வேடம் பற்றி வெளியில் மூச் விடக்கூடாது என்று இயக்குனர் வாய்ப்பூட்டு போட்டு வைத்திருந்தபோதும், தனது ஆர்வக்கோளாறினால் அதை உளறித்தள்ளி விட்டாராம். இதனால் டென்சனான பிரமாண்டம், பவரை வைத்து படமாக்கிய மொத்த காட்சிகளையும் கத்தரித்து எறிந்து விட்டாராம். இதனால் பிரமாண்டத்தின் படம் வந்தால் மறுபடியும் தனது மார்க்கெட் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்த்திருநத பவர், எனக்கு நானே ஆப்பு வைத்துக்கொண்டேனே என்று இப்போது தலையில் கைவைத்து உட்கார்ந்திருக்கிறார்.