சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
அஞ்சலியின் சினிமா பயணம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால், திடீரென்று சென்னையிலுள்ள தனது சித்தி தனது சொத்துக்களை அபகரிப்பதாக சொல்லிக்கொண்டு ஆந்திராவுக்கு பெட்டி படுக்கையுடன் ஓடினார். அதையடுத்து அவர் தமிழ் படங்களில் சிங்கம்-2வில் மட்டுமே ஒரு பாடலுக்கு நடனமாடினார். ஆனால் தெலுங்கில் மட்டும் ஓரிரு படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், திடீர் திடீரென்று அஞ்சலி காணாமல போய் விடுவதாக ஆந்திராவில் சில மாதங்களாகவே செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. யாரையோ அவர் ரகசிய திருமணம் செய்து கொணடு அமெரிக்காவில் குடித்தனம் நடத்தி வருவதாககூட சொல்கிறார்கள். ஆனால் இதுகுறிதது இதுவரை அஞ்சலி எந்த பதிலும் சொல்லாமல் மெளனம் சாதித்து வருவதால், இதுவரை இந்த செயதியை நம்பாமல் இருந்தவர்கள்கூட இப்போது நம்பத் தொடங்கியிருக்கிறார்களாம்.
அதுமட்டுமின்றி, தற்போது அஞ்சலியின் உடல்கட்டும் மானாவாரியாக பெருத்துக்கொண்டே செல்கிறதாம். முதல் பாகத்தில் தங்கச்சி மாதிரியும், இரண்டாம் பாகத்தில் அக்காள் மாதிரியும் உருமாறிக்கொண்டே செல்கிறாராம். அதனால் இனி இவர் கதாநாயகி வேடத்துக்கு செட்டாக மர்ட்டார் என்று அஞ்சலியை புதிய படங்களுக்கு புக் பண்ணயிருந்தவர்கள் இப்போது ஓரங்கட்டுகிறார்களாம். ஆக, சமந்தா, தமன்னா போன்ற நடிகைகளுக்கு பலத்த போட்டியாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அஞ்சலி தானாக வீழ்ந்து கொண்டிருக்கிறாராம்.