ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
இதோ பொங்கல் வந்து விட்டது. ஆனால் இந்த வருட பொங்கலுக்கு நான்கே நான்கு தமிழ் படங்கள் மட்டுமே திரைக்கு வரவுள்ளன. பட்டியலில் இருந்த பல படங்கள் கடைசி நேரத்தில் கழன்று கொள்ள, குட்டி, ஆயிரத்தில் ஒருவன், நாணயம், போர்க்களம் என 4 படங்கள் மட்டுமே ஜனவரி 14ல் திரைக்கு வருகின்றன.
இதில் பருத்திவீரன் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா உள்ளிட்டவர்கள் செல்வராகவன் இயக்கத்தில் நடித்திருக்கும் ஆயிரத்தில் ஒருவன் படம் இரண்டு - மூன்று வருடங்களாக எதிர்பார்ப்பை தூண்டி விட்டிருக்கும் படமாகும். அதேமாதிரி குட்டி படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம்தான். நாயகன் தனுஷ் - இயக்குனர் ஜவஹர் கூட்டணி ஏற்கனவே யாரடி நீ மோகினி பட வெற்றிக் கூட்டணி என்பதும், இதில் இணையும் தனுஷ் - ஸ்ரேயா ஜோடியும் ஏற்கனவே திருவிளையாடல் ஆரம்பம் வெற்றிப்பட ஜோடி என்பது குட்டிக்கு எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. அடுத்து நாணயம். பிரசன்னா ஹீரோ, சிபிராஜ் வில்லன் என்பதும் சென்னை 28 வெற்றிப்படம் தந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வழங்க, எஸ்.பி.சரன் தங்களது கேபிடல் பிலிம் ஒர்க்ஸ் மூலம் தயாரித்துள்ள படம் என்பதும் நாணயத்தின் சிறப்பு. அதே மாதிரி பொல்லாதவன், வெண்ணிலா கபடிக்குழு புகழ் கிஷோர் முதன் முதலாக ஹீரோவாக நடித்து, தாய்லாந்து இன்ஸ்டிடியூட் மாணவர் பண்டி சரோஜ்குமார் இயக்கியிருக்கும் போர்க்களம் படமும் பல்வேறு புதுமைகளால் எக்கச்சக்க எதிர்பார்ப்பிற்கு உள்ளாகி இருக்கிறது.
நான்கு படம் என்றாலும் நச் என்ற படங்கள் என்பதால் சபாஷ்... சரியாவ போட்டி எனும் அளவில் இந்த பொங்கல் தமிழ் சினிமாவின் சாதனை பொங்கலாக இருக்குமென்றால் மிகையல்ல!