மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
சினிமாவுக்கு தணிக்கை குழு இருப்பது மாதிரி தொலைக்காட்சிக்கு தணிக்கை குழு வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது. இது தொடர்பாக மும்பை இந்து ஜன்ஜக்குருதி சமிதி என்ற அமைப்பு உச்ச நீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது.
"ஒரு தொலைக்காட்சி சேனல் விதிமுறைகளை மீறும்போது அதன் மீது கேபிள் டெலிவிஷன் நெட்ஒர்க் ஒழுங்குமுறை சட்டப்படி அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. பத்திரிகைகளுக்கு இந்திய பிரஸ் கவுன்சில் இருப்பதைப்போல தொலைக்காட்சி சேனல்களுக்கு ஒழுங்குமுறை ஆணையம் எதுவும் இல்லை. இதனால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தணிக்கை இல்லை. கட்டுப்பாடு இல்லை. தணிக்கை சான்றிதழ் பெறாத படங்களையும் ஒளிபரப்புகிறார்கள். இதனை கட்டுப்படுத்த வேண்டும். தொலைக்காட்சி சேனல்களை கட்டுப்படுத்த ஒரு ஒழுங்குமுறை வழிகாட்டும் ஆணையம் ஒன்றை உருவாக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது நீதிமன்றம். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம், நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆகியோர் அடங்கி பென்ஞ், தகவல் ஒளிபரப்புத்துறை, நீதித்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து அரசு துறைகளுக்கும். பிரஸ் கவுன்சிலுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.