அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா |
விஜய், மோகன்லால் நடிக்கும் ஜில்லா படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. இந்தப் படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் பலமான நட்பு உருவாகிவிட்டது. இருவரும் உடன் பிறவா சகோதரர்கள் ஆகிவிட்டனர். படப்பிடிப்புகள் முடிந்து விட்ட நிலையில் மோகன்லால் குடும்பத்தை தனது வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருந்தார் விஜய். மோகன்லாலும் தன் குடும்பத்தினருடன் விஜய் வீட்டுக்குச் சென்றார். விருந்துண்டு மகிழ்ந்தார். பதிலுக்கு அவர் தன் வீட்டுக்கு குடும்பத்தோடு வருமாறு அழைத்தார்.
அதன்படி ஈசியாரில் உள்ள மோகன்லால் வீட்டுக்கு விஜய் தன் குடும்பத்தினருடன் சென்றார். கேரள பாரம்பரிய முறைப்படி விஜய்க்கு விருந்து கொடுத்தார் மோகன்லால். விருந்து முடிந்து கிளம்பும்போது தானே வரைந்த விஜய்யின் ஆறடி உயர ஓவியத்தை பரிசாக அளித்தார். அந்த ஓவியம் இப்போது விஜய் வீட்டின் வரவேற்பரையை அலங்கரித்திருக்கிறது. இருவரின் நட்பைப் பார்த்து கோலிவிட்டும், மல்லுவுட்டும் ஆச்சர்யத்தில் இருக்கிறது.