ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
எங்கேயும் எப்போதும் என்ற படத்தை இயக்கியவர் சரவணன். ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளரான இவர், அதற்கடுத்து லிங்குசாமியின் திருப்பதி பிரதர்சுக்காக இயக்கியிருக்கிற படம்தான் இவன் வேற மாதிரி. இந்த படத்தின் கதையை விஷால் உள்ளிட்ட சில நடிகர்களிடம் சரவணன் சொன்னபோது, நடிக்க மறுத்து விட்டனர். அதன்பிறகுதான் முன்னணி ஹீரோக்கள் வேண்டாம் என்று இறங்கி வந்து கும்கி படத்தில் நடித்த விக்ரம் பிரபுவிடம் கதை சொன்னார்.
ஆனால், முதலில் கதையக்கேட்டு நடிப்பதாக சொன்னவர், பின்னர் யோசித்து பார்த்தேன். இது எனக்கு திருப்தியா இல்லையே என்று மறுத்தார். அதையடுத்து அவருக்கு விளக்கமாக சொல்லி நடிக்க வைத்தனர். ஆக, இப்போது படம் திரைக்கு வரத்தயாராகிவிட்டது. இவன் வேற மாதிரி என்ற டைட்டிலுக்கேற்ப வேற மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாராம் விக்ரம்பிரபு.
அதோடு, இப்படத்துக்கு கதாநாயகி தேடும் படலம் பல மாதங்களாக நடந்து வந்தது. கிட்டத்தட்ட இந்தியா முழுவதிலும் உள்ள மாடலிங் நடிகைகளையெல்லாம் பார்த்து விட்டவர்கள், எதிலும் திருப்தி ஏற்படாமல் கடைசியாக டில்லியில் இருந்து வந்த சுரபி என்ற மாடல் அழகியை ஓ.கே செய்தனர். சுத்தமாக தமிழ் தெரியாத பெண் எனறாலும், ஆங்கிலத்தில் தமிழை எழுதி வைத்துக்கொண்டு ஆர்வமாக பேசி நடித்துள்ளாராம்.
அதுமட்டுமின்றி, வழக்கமான கதாநாயகிகளைப்போல் இல்லாமல் இவருக்கு கூடுதலாக நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார்களாம். குறிப்பாக, க்ளைமாக்ஸ் காட்சியில் ஹீரோக்களுக்கு நிகராக அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாராம் சுரபி. ஆக, முதல் படமே சுரபிக்கு முக்கியமான படமாகி விட்டது என்கிறார்கள்.