ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் கதை வறட்சி ஏற்பட்டுள்ளது என்று சினிமா பிரபலங்களே மேடைகளில் பேசி வருகிறார்கள். அது உண்மைதான் என்பதை உணர்த்தும் வகையில் வருகிற படங்கள் எல்லாமே ஒரே பாணியில்தான் உள்ளன. முக்கியமாக படத்துக்கு பத்து சீனாவது டாஸ்மாக் பின்னணியில் வைத்து விடுகிறார்கள். இதெல்லாமே தமிழ் சினிமாவில் நல்ல கிரியேட்டர்கள் இல்லை என்பதைத்தான் உணர்த்துகிறது.
இந்த நிலையில், விக்ரம் நடித்த கரிகாலன் உள்பட சில படங்கள் தொடங்கப்பட்டபோதே, அது என்னுடைய கதை என்று உதவி இயக்குனர் ஒருவர் கொடி பிடித்த காரணத்தினால் கிடப்பில் போடப்பட்டதும் கோடம்பாக்த்தில் நடந்து வருகிறது. இப்படி கதை சம்பந்தமான சர்ச்சைகள் அதிகரித்து வரும் நிலையில், இப்போது சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்த பாண்டியநாடு படத்தின் கதையும் என்னுடையது என்று ஆண்டிப்பட்டையைச் சேர்ந்த புவனராஜா என்ற உதவி இயக்குனர் ஒருவர் சர்ச்சையை கிளப்பியிருககிறார்.
அழகர்சாமியின் குதிரை படப்பிடிப்புக்கு ஆண்டிப்பட்டிக்கு சுசீந்திரன் வந்தபோது, நான் இயக்கிய குறும்படம் மட்டுமின்றி, என்னிடமிருந்த இரண்டு கதைகளை சொன்னேன். அந்த இரண்டு கதைகளையும் இணைத்துதான் இப்போது அவர் பாண்டியநாடு படத்தை இயக்கியிருக்கிறார் மேலும்,
கதையின் முக்கிய சாரம்சத்தை எடுத்துக்கொண்டு, மணல் திருட்டை கிரானைட் திருட்டு என்றும், லாரி மோதி சாவதை பஸ் மோதி சாவது போலவும் மாற்றியிருக்கிறார் என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
ஆனால் இதுகுறித்து சுசீந்திரன் தரப்பில் கூறும்போது, தேனி பகுதிகளில் ஒருவரை பழி வாங்கும்போது கை கால்களை கட்டி கிணற்றில் போட்டு விடுவார்கள் என்பதைத்தான் ஒருமுறை என்னிடம் சொன்னார் புவனராஜா. அதை மட்டுமே நான் க்ளைமாக்சில் பயன்படுத்தினேன். மற்றபடி அவர் கதையை நான் படமாக்கி விட்டேன் என்று கூறுவதில் உண்மையில்லை என்று மறுத்துள்ளார். அதோடு, புவனராஜா மீது இயக்குனர் சங்கத்திலும் புகார் அளிக்கப்போவதாக கூறியுள்ளார்.