அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
நேரம், ராஜா ராணி, நய்யாண்டி படங்களில் நடித்து வந்தபோது ரொம்ப மூடியாக இருந்தார் நஸ்ரியா. மீடியாக்களிடமும் ஓப்பனாக பேச மாட்டார். அதனால் அவரைப்பற்றிய விசயங்கள் வெளிச்சத்துக்கு வராமலேயே இருந்தது. ஆனால், நய்யாண்டியில் டூப் தொப்புள் விவகாரத்தை சர்ச்சைக்குள்ளாக்கியதில் இருந்து வெளிப்படையான நடிகையாகி விட்டார் நஸ்ரியா.
சில மாதங்களாக தள்ளாடிக்கொண்டிருந்த அவரது மார்க்கெட்டை சில இயக்குனர்கள் தாங்கிப்பிடித்திருப்பதைத் தொடர்ந்து தற்போது தனது வெட்டி பந்தாக்களை வெட்டி எறிந்து விட்டு எல்லோரிடமும் சகஜமாக பேசி வருகிறார் நடிகை. அதிலும் தனது இளமைக்கால இனிமையான சம்பவங்கள் சிலவற்றையும் ஓப்பன் பண்ணி மற்றவர்களின் மனதில் இடம் பிடிக்கிறார்.
அப்படி அவர் கூறிய விசயங்களில் ஒன்றுதான் சின்ன வயது காதல். ஆனால் இவர் யாரையும் காதலிக்கவில்லையாம். இவரது அழகைப்பார்த்து படிக்கிற காலத்தில் பல பையன்கள் இவரை வட்டம் போட்டார்களாம். அதில் ஒருவன், ஒருநாள் இவரிடம் வந்து, ஐ லவ் யூ சொன்னதோடு, உன் கண்ணு ரொம்ப அழகா இருக்கு என்று சொல்லிவிட்டு பயத்தில் ஓடி விட்டானாம்.
ஆனால் அதன்பிறகு அந்த பையன், இவர் கண்ணில் படவே இல்லையாம். என்றாலும், அவன் சொன்ன வார்த்தைகள் இன்றைக்கும் நஸ்ரியாவின் காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறதாம்.