ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
பாலா இயக்கத்தில் உருவான பரதேசி பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டது. சிறந்த இயக்குனர் பாலா, நடிகர் அதர்வா, ஒளிப்பதிவாளர் செழியன் ஆகியோருக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிறந்த ஆடை வடிமைப்பாளர் விருது மட்டுமே பூர்ணிமா ராமசாமிக்கு கிடைத்தது. இது தமிழ் திரைஉலகிற்கே பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்தது. இந்தியா செய்யாதாததை இப்போது உலக நாடுகள் செய்து கொண்டிருக்கிறது. பரதேசி பங்கேற்கும் படவிழாக்களில் எல்லாம் விருதுகளை குவித்துக் கொண்டிருக்கிறது.
தற்போது லண்டனில் சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. இதில் இந்திய சார்பில் பங்கேற்க அனுப்பி வைக்கப்பட்ட ஒரே படம் பரதேசி. அது 9 பிரிவுகளில் போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்டது. அதில் இரண்டு விருதுகளை தட்டிச் சென்றது. சிறந்த ஒளிப்பதிவாளராக செழியனும், ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கருப்பு வெள்ளைக்கும், கலருக்கும் இடையிலான ஒரு தரத்தில் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார் செழியன். பச்சை பசேல் பின்னணியில் வறுமையை சொல்லவே இந்த முறையிலான ஒளிப்பதிவு. 1940களின் உடைகளை வடிவமைத்திருந்தார் பூர்ணிமா.