மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
கோவாவில் கடந்த 2004ம் ஆண்டு முதல் அந்த மாநில அரசின் உதவியோடு சர்வதேச திரைப்பட விழாக்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தியாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாக்களில் இதுவே மிகவும் பெரியது. இந்த ஆண்டு வருகிற நவம்பர் 20ந் தேதி கோவா சர்வதேச திரைப்பட விழா தொடங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் சினிமாவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவர் விழாவை துவக்கி வைப்பார். கடந்த ஆண்டு அக்ஷய்குமார் துவக்கி வைத்தார். அதற்கு முன்பு அமிதாப்பச்சன் தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு விழாவை துவக்கி வைக்குமாறு ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
"திரைப்பட விழாவை துவக்கி வைக்க ரஜினிக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். அவர் அதனை உறுதி செய்வார் என்று நம்புகிறோம். அவர் வந்தால் பெருமை அடைவோம், இந்த மாத இறுதி வரை அவர் பதிலுக்காக காத்திருப்போம்" என்று விழா அமைப்பாளர் விஷ்ணு வாக் தெரிவித்திருக்கிறார்.
கோவா திரைப்பட விழாவில் தென்னிந்திய திரைப்படங்களும், கலைஞர்களும் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. அதனால் ரஜினி அதில் கலந்து கொள்வாரா என்பது உறுதியாக தெரியவில்லை.