ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நய்யாண்டி படத்தில் இடம்பெறும் தொப்புள் காட்சி பிரச்னையால் டைரக்டர் சற்குணம், நஸ்ரியா இடையேயான மோதல் முற்றுகிறது. சற்குணம் தன்னை மரட்டுவதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார் நஸ்ரியா.
நடிகர் தனுஷ், நடிகை நஸ்ரியாநசீம் நடிப்பில், "நய்யாண்டி படத்தை, சற்குணம் இயக்கியுள்ளார். இப்படத்தில் வரும், "இனிக்க இனிக்கபாடல் காட்சிகளில், நஸ்ரியா நசீம்,"தொப்புள் தெரிய கவர்ச்சியாக நடித்த காட்சி விளம்பர டிரெயிலராக, "யூ டியூப்பில் வெளியிடப்பட்டது. இதைப் பார்த்த நஸ்ரியா, ""நான் தொப்புள் தெரியும் படி நடிக்கவில்லை. வேறொரு பெண்ணை, "டூப் போட்டு நடிக்க வைத்து, கவர்ச்சிக் காட்சியை பட விளம்பரத்தில் சேர்த்து, இயக்குனர், மோசடி செய்து விட்டார். நடிகர் சங்கத்தில் புகார் செய்துள்ளேன்; சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன், என, நேற்று முன்தினம் கூறியிருந்தார். ஆனால் இதை இயக்குனர் சற்குணம் மறுத்துள்ளார். சுய விளம்பரத்திற்காக நஸ்ரியா இப்படி செய்வதாக சற்குணம் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், நடிகை நஸ்ரியா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது: "நய்யாண்டி பட டிரெய்லரில், நான் தொப்புளை காட்டி நடிப்பது போன்ற காட்சிகளை புகுத்தி, கவர்ச்சியாக நடித்ததாக காண்பித்துள்ளனர். இதை கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். நான் கவர்ச்சியாக நடிக்கவில்லை. வேறு ஒரு நடிகையை வைத்து எடுத்த காட்சிகளை சேர்த்துள்ளார். இயக்குனர் சற்குணத்திடம் கேட்டபோது, தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டினார். மேலும், தயாரிப்பாளரை மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது, அழைப்பை ஏற்க மறுத்து விட்டார். படம் வெளியாவதற்கு முன் நான் பார்க்க வேண்டும். அனுமதிக்காவிட்டால், படம் வெளியாவதைத் தடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்துள்ளார்.