ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விழுப்புரம் சின்னையா பிள்ளை கணேசன் என்ற வி.சி.கணேசன் 8 வயதில் நாடகை கொட்டகைக்குள் நுழைந்தார். திருச்சி தேவர் ஹால் ஒரு மகா கலைஞனின் பாதங்களை தாங்கும் பாக்கியம் பெற்றது. மராட்டிய மாவீரன் சிவாஜி கேரக்டரில் வாழ்ந்ததால் தந்தை பெரியாரால் சிவாஜி கணேசன் என்று அழைக்கப்பட்டு அதுவே நிலைத்த பெயரும் ஆனது. மக்கள் கொடுத்த பட்டம் நடிகர் திலகம்.
* பராசக்தி சிவாஜியின் முதல் படம் அல்ல. பூங்கோதைதான் சிவாஜயின் முதல் படம். அதனை தயாரித்தவர் நடிகை அஞ்சலிதேவி. அதற்காக சிவாஜி பெற்ற முதல் சம்பளம் 101 ரூபாய். முதலில் வெளிவந்தது பராசக்தி, பணம், பரதேசி, படங்களுக்கு பிறகே பூங்கோதை வெளிவந்தது. ஆள் ஒல்லிப்பிச்சானாக இருக்கிறார் என்று 3 மாதம் சத்துணவு கொடுக்கப்பட்டு பின்னர் பராசக்தியில் நடிக்க வைக்கப்பட்டார்.
* மனோகரா சிவாஜிக்கு ஹீரோ அந்ததஸ்தை கொடுத்தது. அதன் பிறகு 300 படங்களை தாண்டியது அவரது சாதனை.
* பரமசிவன், கிருஷ்ணன், முருகன், போன்ற கடவுள்களை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியவர்.
* வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜராஜ சோழன், சாம்ராட் அசோகன், சிவாஜி உள்ளிட்ட பல சரித்திர புருஷர்களை அடையாளம் காட்டியவர்
* பாரதியார், வ.உ.சிதம்பரம்பிள்ளை, பகத்சிங், வாஞ்சிநாதன் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களை கண் முன் நிறுத்தியவர்.
* உலகமே அவரை சிறந்த நடிகர் என்று புகழ்ந்தபோதும் இந்திய அரசு அவரை சிறந்த நடிகராக தேர்வு செய்ததே இல்லை.
* இருந்தபோதும் மத்திய அரசியின் பத்மஸ்ரீ, பத்மபூஷன், செவாலியர் விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது, தெலுங்கு அரசின் என்டிஆர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
* நாடக உலகில் இருந்து சினிமாவுக்கு வந்ததால் அக்காலத்திய நடிப்பு பாணியை பின்பற்றினார். அதனை சிலர் ஓவர் ஆக்டிங் என்று விமர்சனம் செய்தார்கள். பிற்காலத்தில் முதல் மரியாதை, தேவர்மகன், படையப்பா, படங்களில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அவர்கள் வாயை அடைத்தார்.
* காமராஜரின் தொண்டராக காங்கிரசில் இணைந்தார். பிறகு காங்கிரசிலிருந்து வெளியேறி தமிழக முன்னேற்ற முன்னணி என்ற அரசியல் கட்சி தொடங்கினார். அரிதாரத்தில் ஜெயித்த சிவாஜியால் அரசியலில் ஜெயிக்க முடியவில்லை. நான் சாகும்வரை அன்னை இல்லத்துக்குள் அரசியல்வாதிகள் நுழையக்கூடாது என்று அறிவித்தார்.
* சினிமாவில் சாதனை படைத்தாலும் தன் வீட்டுக்குள் சினிமா வராமல் பார்த்துக் கொண்டார். அவரது நடிப்பு வாரிசாக பிரபு சினிமாவில் ஜெயித்தார். இப்போது பிரபுவின் மகன் விக்ரம் அன்னை இல்லத்தின் வாரிசாக சினிமாவில் வலம் வருகிறார்.
* அவரது கர்ணன், வசந்த மாளிகை, பாசமலர் படங்கள் மறு வெளியீடு செய்யப்பட்டு வெற்றி கண்டது. இன்னும் சில படங்கள் விரைவில் வர இருக்கிறது.
* ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளை அவரது குடும்பத்தினர் மட்டுமே கொண்டாடுவது காலத்தின் கோலம்.
* இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் அதற்கு இடமும் இல்லை படிப்பதற்கு உங்களுக்கு நேரமும் இல்லை.
* கன்னடத்தில் ராஜ்குமார் கொண்டாடப்படுவதைப்போல, ஆந்திராவில் என்.டி.ராமராவை கொண்டாடுவதைப்போல மலையாளத்தில் பிரேம் நசீரை கொண்டாடுவதைப்போல் சிவாஜியை தமிழ்நாடு அரசும், தமிழக ரசிகர்களும் கொண்டாடும் நாளே அவருக்கு உண்மையான பிறந்த நாள்.