ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சென்னையில் சினிமா நூற்றாண்டு விழா நான்கு நாட்கள் நடந்தது. பல மொழி சினிமாவில் சாதனை படைத்தவர்களுக்கு தமிழக முதல்வரும், ஜனாதிபதியும் விருது வழங்கினார்கள். எங்கள் குடும்பத்தை மறந்து விட்டார்கள் என்று நடிகையும், டான்ஸ் மாஸ்டருமான காயத்ரி ரகுராம் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது: எங்கள் தாத்தா கே.சுப்பிரமணியன் தான் முதல் தமிழ் சினிமா இயக்குனர், மற்றும் தயாரிப்பாளர். தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையை உருவாக்கியவர்களில் அவரும் ஒருவர். அதே சங்கம் நடத்திய விழாவில் எங்கள் தாத்தாவை மறந்து விட்டார்கள். என் தந்தை ரகுராம் என் தாய், சித்திகள் (கலா, பிருந்தா சகோதரிகள்), மற்றும் எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் (சுந்தரம் மாஸ்டர் அவரது மகன்கள் பிரபுதேவா, ராஜு சுந்தரம்) எல்லோருமே சினிமாவில் இருக்கிறோம். 75 ஆண்டுகளாக எங்கள் குடும்பம் சினிமாவுக்காக உழைத்திருக்கிறது. யாரையும் சினிமா நூற்றாண்டு விழா கண்டு கொள்ளவில்லை. சினிமா நூற்றாண்டு விழா விருது தேர்வு பாரபட்சமாக நடந்துள்ளது. இது எனக்கு வேதனையை தருகிறது" என்று கூறியுள்ளார்.