ஒரே நேரத்தில் ஹிந்தி, மலையாளத்தில் தயாராகும் 'திரிஷ்யம் 3' ; துவங்கும் தேதி ரிலீஸ் தேதி இரண்டும் ஒன்றே | ராஜமவுலி பட ஈயை காப்பி அடித்ததாக மலையாள படக்குழுவினருக்கு லீகல் நோட்டீஸ் | போதைப்பொருள் பயன்படுத்த மாட்டேன் ; அபிடவிட் கேட்கும் கேரள தயாரிப்பாளர் சங்கம் | டைட்டிலை மாற்றச் சொல்லி சென்சார் நிர்பந்தம் ; தள்ளிப்போன சுரேஷ் கோபி பட ரிலீஸ் | ஆமதாபாத் விமானத்தில் பயணிக்காத சினிமா இயக்குனரும் விபத்தில் மரணம் ; ஒரு வாரத்திற்கு பின் கண்டுபிடிப்பு | குபேரா படத்திற்காகவும் தேசிய விருது பெறுவாரா தனுஷ்? | விமல் நடிக்கும் 36வது படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்கியது! | அடுத்த மாதத்தில் 'கருப்பு' படத்தின் மிகப்பெரிய விருந்து! ஆர். ஜே .பாலாஜி வெளியிட்ட தகவல் | ஒரே நாளில் முக்கிய சினிமா பிரபலங்களுக்குப் பிறந்தநாள் | நாகார்ஜுனாவுக்கு திருப்புமுனை தந்த 'குபேரா' |
பத்து வருடங்களுக்கு முன்பு வெளியான படம் அன்பே சிவம். கமல், மாதவன், கிரண், நாசர், சந்தானபாரதி நடித்திருந்தார்கள். சுந்தர்.சி டைரக்ட் செய்திருந்தார், வித்யாசாகர் மியூசிக் போட்டிருந்தார். லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தது. ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் ரிலீஸ் செய்திருந்தது.
அன்பு ஒன்றுதான் எல்லாவற்றிலும் சிறந்தது என்கிற கருத்தை ஆணித்தரமாக வலியுறுத்தி எடுக்கப்பட்டிருந்தது. சமூக போராளியாக வாழும் ஒருவன் அன்பால் வாழும் ஒரு அற்புத வாழ்க்கையை சொன்னது. கமல் நடித்ததில் அவருக்கு பிடித்த 5 படங்களில் இதுவும் ஒன்று. ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ரசிப்பு தரம் படத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. கதை சொன்ன விதம் ரசிகனுக்கு பிடிக்கவில்லை படம் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை. தயாரிப்பாளர்களுக்கு ஏகப்பட்ட நஷ்டம். பத்து வருடங்களுக்கு பிறகு வந்திருக்க வேண்டிய படம் என்று அப்போது மீடியாக்களால் விமர்சிக்கப்பட்டது.
அது இப்போது சரியாகி இருக்கிறது. இப்போதுள்ள இளைஞர்கள் அன்பே சிவம் படத்தை சிலாகித்து ரசிக்கிறார்கள். தொலைக்காட்சியில் அந்த படம் ஒளிபரப்பானால் பாராட்டி அந்த நிறுவனத்துக் ஏகப்பட்ட கடிதங்கள் வருகிறதாம். மறுபடியும் எப்போது ஒளிபரப்புவீர்கள் என்ற கேட்கிறார்களாம்.
படத் தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கும் படத்தை ரீ- ரிலீஸ் பண்ணச் சொல்லி கடிதமும், தொலைபேசிகளும் வருகிறதாம். இதனால் படத்தை ரி ரீலீஸ் பண்ணும் முயற்சியில் தயாரிப்பாளர் கே.முரளிதரன் ஈடுபட்டிருக்கிறார். "உயர்ந்த தரமான படங்கள் மறு வெளியீடு செய்யப்பட்டு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கமலின், ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தின் மறு ரிலீசுக்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதனால் ‘அன்பே சிவம்’ படத்தை டிஜிட்டல்படுத்தி ஆடியோ தரம் உயர்த்தி மறுபடியும் வெளியிட முடிவு செய்திருக்கிறோம். கமலின் அனுமதிக்காக காத்திருக்கிறோம்" என்கிறார் முரளிதரன்.