ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தற்போது, ஒரு நாள் கூட ஓய்வில்லாமல் நடித்து வருபவர் சந்தானம். படத்துக்கு படம், காமெடியனாக மட்டுமே நடித்து வந்த அவர், ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில், தானும் இன்னொரு ஹீரோ போன்று நடித்தார். அதோடு, ‘நானும் எத்தனை நாளைக்குத் தான் ஊரான் காதலையே ஊட்டி வளர்க்கிறது; எனக்கும் ஊட்டிக்கு சென்று டூயட் பாடணும்னு ஆசை இருக்காதா...’ என்று, அப்படத்தில் விசாகா சிங்கிடம் வசனமெல்லாம் பேசினார்.அந்த வசனத்தை நிஜமாக்கும் வகையில், தற்போது, ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற படத்தில், ஹீரோவாகவே நடித்து வருகிறார் சந்தானம்.
காமெடி நடிகர் என்ற சாயல் தெரியாத அளவுக்கு, முழு ஹீரோவாகவே மாறி நடித்து வரும் சந்தானம், அதற்காக நிறைய ஹோம் ஒர்க் செய்கிறார். அதோடு, இதுவரை பல படங்களில், ஹீரோக்களுடன் பாடல் காட்சியில் நடனமாடி, தன் நடன திறமையை வளர்த்துக் கொண்ட சந்தானம், இந்த படத்தில் டூயட் மற்றும் ஓப்பனிங் பாடல்களில் அதிரடி ஆட்டமும் ஆடியுள்ளார். சமீபகாலமாக, அவரைப் பற்றி எழுந்துள்ள சர்ச்சை குறித்து கேட்டபோது, ‘காய்ச்ச மரம் தானே பாஸ், கல்லடி படும்’ என்கிறது, சந்தானம் தரப்பு.