ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பீட்சாவை விட ஜிகர்தண்டா ஒரு சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று அப்பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். பீட்சா படத்தின் மூலம் மக்களிடம் பாராட்டை அள்ளிய கார்த்திக் சுப்புராஜ், தனது அடுத்த படமாக ஜிகர்தண்டா என்ற படத்தை எடுத்துள்ளார்.
ஜிகர்தண்டா படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் கூறும்போது, பீட்சாவில் பயம் மட்டுமே இருக்கும். ஆனால், ஜிகர்தண்டா முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படமாக இருக்கும். பீட்சாவை விட இந்த படத்தில் ஸ்க்ரிப்ட் நாலு மடங்கு வேகமாக இருக்கும். இது வழக்கமான மதுரை படங்கள் மாதிரி இல்லாமல், விஷூவல், இசை, வசனங்கள்னு அனைத்துமே வேற மாதிரி இருக்கும். சித்தார்த்துக்கு இந்த கதை ரொம்ப பிடித்திருந்தது. இது வழக்கமான சாக்லேட் பாய் கதை இல்லை. நிறைய சவால்களை ஜஸ்ட் லைக் தட் சாதிக்கிற செம கேரக்டர். பீட்சாவை ஒரு வீட்டுக்குள்ளேயே வெச்சு முடிச்சுட்டோம். ஆனா, இந்த படம் முழுக்க அவுட்டோர். ஏகப்பட்ட பிரபலங்கள் நிறைய சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது என்றார்.