மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
அசல் படத்திற்கு பின்னர் வந்த வாய்ப்புகளை தட்டி கழித்த இசையமைப்பாளர் பரத்வாஜ், அதை தொடர்ந்து எந்த படங்களுக்கும் இசையமைக்கவில்லை. ஆனால், அதை விட உலக மக்களுக்காக ஒரு நல்ல காரியத்தை அவர் செய்துள்ளார். ஆம், உலகப் பொதுமறையாம் திருக்குறளின் 1330 குறளுக்கும் தனித்தனி டியூன்கள் போட்டு மெகா ஆல்பம் தயார் செய்து இருக்கிறாராம்.
இதற்கான சமீபத்தில் தான் உலகம் முழுவதும் அவர் சுற்றுப் பயணம் செய்தாராம். ஒவ்வொரு குறளுக்கும் பிரபலமானவர்களை விட்டு விளக்க உரையும் சொல்ல வைத்திருக்கிறாராம். இவருக்கு இந்த ஐடியாவை கொடுத்தது ஏ.ஆர்.ரஹ்மான் தானாம். தமிழகத்தில் மிகவிரைவில் வி.வி.ஐ.பி. ஒருவர் கையால் இந்த ஆல்பம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆல்பம் வெளியீட்டுக்கு பின்னர் மீண்டும் திரைப்படங்களுக்கு பரத்வாஜ் இசையமைக்க தொடங்கவுள்ளராம்.