ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இரண்டாம் உலகம் படத்தை தனது கேரியரில் மிக முக்கியமான படமாக கருதுகிறார் செல்வராகவன். அதனால்தான் மயக்கம் என்ன படம் தோல்வியடைந்ததை அடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படத்தை பார்த்து பார்த்து படமாக்கி வந்த அவர், கடந்த சில மாதங்களாக அனிமேஷன் பணிகளில் இறங்கியுள்ளார்.
ரஜினியின் கோச்சடையான் போலவே அவதார் பட பாணியில் உருவாகியுள்ள இரண்டாம் உலகம் படம் போட்ட பட்ஜெட்டை எகிறி விட்டதால் தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளில் மட்டுமே வெளியிட்டால் செல்வு செய்த பணத்தை எடுக்க முடியாது என்பதால், இப்போது உலக அளவில் 7 முக்கிய மொழிகளில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்.
அதாவது, தமிழில் இரண்டாம் உலகம், தெலுங்கில் பிருந்தாவனம்லோ நந்தகுமாரடு என்ற பெயரில் வெளியிடுவதோடு, இந்தி, ரஷ்யன், ஜார்ஜியன், துருக்கி, உஸ்பெக் ஆகிய மொழிகளிலும் வெளியிடுகிறார்களாம். தற்போது படத்தின் அனைத்துக்கட்ட பணிகளும் முடிந்து விட்டதால், மற்ற மொழிகளில் எந்தெந்த பெயர்களில் வெளியிடலாம் என்பது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் செல்வராகவன்.
இப்படி தாங்கள் நடித்த படம் உலக அளவில் பல மொழிகளிலும் வெளியாக இருப்பதால் படத்தில் நடித்துள்ள ஆர்யா-அனுஷ்கா இருவரும் மிகுந்த சந்தோசத்தில் இருக்கிறார்களாம்.