மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
கன்னி தீவு பொண்ணு நீத்து சந்திராவுக்கு, ஆதி பகவன் படத்துக்கு பின், தமிழில் வாய்ப்புகள் இல்லை. ஆனால், அவரோ, இதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. தனக்கு மிகவும் பிடித்த கராத்தே சண்டையில், அனைத்து விஷயங்களையும் கரைத்து குடித்துக் கொண்டிருக்கிறார். டேக்வோண்டோ என்ற தற்காப்பு கலையில், அம்மணி, பிளாக் பெல்ட் வாங்கியுள்ளாராம். ஆசிய அளவிலான போட்டிகளில், இந்தியா சார்பில், இரண்டு முறை பங்கேற்று உள்ளார். அவர். பெண்களுக்கு எதிராக, சமீபகாலமாக நடக்கும் கொடுமைகளை கண்டு கொந்தளித்து போயிருக்கிறார், அவர்.
நீத்து கூறுகையில்,"அனைத்து பள்ளிகளிலும், 4 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில், மாணவியருக்கு கட்டாயமாக, கராத்தே கற்றுக் கொடுக்க வேண்டும். அப்போது தான், அவர்களுக்கு, எந்த ஒரு பிரச்னையையும் சமாளிக்கும் வகையிலான மன தைரியம் வரும். தற்காப்பு கலைகள் தெரிந்த பெண்கள், கத்தியை காட்டி மிரட்டுபவர்களை, பொளந்து கட்டி விடுவர்" என, கூறியுள்ளார்.