ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
பாடகசாலை என்ற படத்தில் தமிழுக்கு வந்த கேரள நடிகை இனியா. வாகை சூடவா இவரை புகழ் உச்சிக்கு கொண்டு சென்றது. அப்படத்தில் இனியாவின் நடிப்பைப்பார்த்துதான் பாரதிராஜாவே தனது அன்னக்கொடி படத்துக்கு புக் பண்ணினார். ஆனால், பின்னர் கதையில் செய்த சில மாற்றங்களால் இனியாவும் மாற்றப்பட்டார்.
அதையடுத்து, மெளனகுரு, கண்பேசும் வார்த்தைகள், சென்னையில் ஒருநாள் ஆகிய படங்களில் நடித்த இனியா அதிக எதிர்பார்ப்புடன் நடித்த படம்தான் மாசாணி. டைட்டில் கேரக்டர் என்பதால், அருந்ததி அனுஷ்காவுக்கு பெயர் வாங்கிக்கொடுத்தது போல் இப்படம் தனக்கு அமையும் என்று எதிர்பார்த்தார். ஆனால், படம் வந்ததும் தெரியல போனதும் தெரியல. அதனால் இனியாவும் இப்போது இருக்கிற இடமே தெரியாமல் இருக்கிறார்.
இந்த நிலையில், இப்போது புலிவால் என்றொரு படத்தில் நடிக்கிறார் இனியா. இப்படத்தில் இவர் மட்டுமே ஹீரோயினி இல்லையாம். ஓவியாவும் இருக்கிறாராம். அதனால் ஒரு பாடல் மற்றும் சில காட்சிகளில் தான் வருவாராம். அதனால் இப்போது சினிமா மீது பெரிய அளவில் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார் இனியா. அவரிடத்தில் சினிமாவில் என்ன சாதிக்க விரும்புகிறீர்கள்? என்று கேட்டால், குறைந்தபட்சம் ஒரு பத்து வருசமாவது சினிமாவில் நீடிக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கமாக இருந்தது. ஆனால், இப்போது படம் கிடைப்பதைப்பார்த்தால் நான் நினைத்த இலக்கை அடைய முடியுமான்னு தெரியல என்று விரக்தியாக பேசுகிறார் இனியா.