ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தில்லுமுல்லு படம் வந்த நேரத்தில் பரபரப்பாக பேசப்பட்டவர் மிர்ச்சி சிவா. ரஜினி நடித்த படத்தின் ரீமேக் என்பதால், அந்த படம் பெரிய அளவில் ஓடும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், படத்திற்கு பெரிய அளவில் கொடுக்கப்பட்ட பில்டப்போடு சரி. தியேட்டர்களில் கூட்டம் கூடவில்லை. இருப்பினும், அதே பில்டப்போடு உடனடியாக சில படங்களில் கமிட்டாகி விட்டார் சிவா.
இந்நிலையில், அதற்கடுத்து வெளியான சொன்னா புரியாது படம் தாங்கிப்பிடிக்கும் என்று நினைத்தார். ஆனால் அந்த படமும் கைவிரித்து விட்டது. இதனால் தில்லு முல்லுவுக்கு பிறகு கமிட்டான படங்களுக்கு 20 லட்சம் கேட்டு வந்த சிவா, இப்போது சத்தமில்லாமல் தனது படக்கூலியை குறைத்து விட்டாராம். கைவசம் யா யா, வணக்கம் சென்னை என்ற இரண்டு படங்கள் இருக்கிறது. இரண்டுமே வெற்றி பெற நிறைய வாய்ப்பு உள்ளது என்று அவர் சொடக் போட்டு பேசியபோதும் படாதிபதிகள் அதை நம்பத்தயாராக இல்லையாம்.
நாங்கள் பார்க்காத சினிமாவா? எந்த படம் ஓடும், எது ஓடாது என்று எங்களுக்குத் தெரியாதா? என்று என்று சிவாவுக்கு சினிமா சொல்லிக்கொடுத்தார்களாம். அதன்பிறகுதான் சத்தமில்லாமல் படக்கூலியை குறைத்திருக்கும் சிவா, சினிமாவில் நடிக்க வந்து பல வருடங்களாகி விட்டது. ஆனால் இன்னமும் சொந்தமா ஒரு வீடுகூட வாங்கல. என்னா பொழப்பு சார் இது என்று பீல் பண்ணிக்கொண்டு திரிகிறார்.