ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜயகாந்த் நடித்த சுதேசி படத்தை இயக்கிய ஜே.பி.அழகர் சிலகாலம் பட வாய்ப்பு எதுவும் இன்றி இருந்தார். இப்போது அவர் புதுமுகங்களை வைத்து பிரமுகர் என்ற படத்தை டைரக்ட் செய்துள்ளார். திரிசூல், மோகனவேல், மஞ்சுவா என்ற நியூபேஸ்கள் நடிக்கிறார்கள். கடந்த 20 நாட்களாக தலக்கோனம் காட்டுப் பகுதியில் நடந்து வந்த படப்பிடிப்பு முடிந்து விட்டது.
தன்னோட படத்தை பற்றி டைரக்டர் ஜே.பி.அழகர் கூறியதாவது: இப்பெல்லாம் அரசியல் படம் எடுக்க தயங்குறாங்க நான் தைரியமா படத்தை எடுத்துருக்கேன். ஊழலும், வன்முறையும் நிறைந்த பாலிட்டிக்சுல ஒரு பிரமுகர் நேர்மையா அரசியல் நடத்திக் காட்டுறதுதான் படத்தோட ஸ்டோரி. நாடு முன்னேறணும்னா பொதுமக்களுக்கும் அரசியல் அறிவு வேண்டும். ஜாதியும், மதமும் அவரவர் வீட்டுக்குள்தான் இருக்க வேண்டும். சட்டத்துக்குள் வரக்கூடாது. தமிழகத்தில் தொடர்ந்து வரும் அரசியல் கொலைகளுக்கு தீர்வும் சொல்லப்போறேன் என்கிறார் அழகர்.