ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
செந்திலை துணைக்கு வைத்துக்கொண்டு தமிழ் சினிமாவை ஒரு காலத்தில் தன் கைக்குள் வைத்திருந்தவர் கவுண்டமணி. கடந்த 8 வருடங்களாக படம் எதிலும் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். தற்போது வாய்மை என்ற படத்தில் காமெடியனாக நடித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக அடுத்து ஹீரோவாக நடித்து அதிர வைக்கப்போகிறார்.
கவுண்டமணி ஏற்கெனவே பணம் பத்தும் செய்யும், டில்லி ராஜா, தலையாட்டி பொம்மைகள், பிறந்தேன் வளர்ந்தேன் படங்களில் ஹீரோவாக நடித்தவர்தான். இப்போது கவுதம் மேனனின் உதவியாளர் ஆரோக்கியதாஸ் இயக்கும் "49 ஓ" என்ற படத்தில் கவுண்டமணி ஹீரோவாக நடிக்கிறார். "தேர்தலில் வாக்களிக்கச் செல்லும்போது யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லாவிட்டால் 49 ஓ படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதுதான் படத்தோட தலைப்பு. இது அரசியல் படம் அல்ல. கவுண்டமணி விவசாயியாக நடிக்கிறார். இன்றைக்கு விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகளை கவுண்டமணியின் நக்கல், கேலி, கிண்டல் வாயிலாக சொல்கிறேன். இது அவருக்காகவே எழுதப்பட்ட ஸ்கிரிப்ட். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது என்கிறார் ஆரோக்கியதாஸ்.