ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
"வாகை சூடவா படத்தில் நடித்தபின், தமிழில் தனக்கு அதிகமான வாய்ப்பு கிடைக்கும் என, நினைத்தார், இனியா. ஆனால், படத்துக்கு, பலரும் பாராட்டு தெரிவித்தும், இனியாவுக்கு போதிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. சற்று இடைவெளிக்கு பின், தற்போது, "புலிவால், ரெண்டாவது படம், நினைத்தது யாரோ ஆகிய மூன்று படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அவர் கூறுகையில், "ஆவணப் படங்களில் நடித்திருக்கிறேன். இந்த அனுபவங்கள் தான், எனக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கு, ரொம்பவும் உதவின என்கிறார்.மேலும்,"வாகை சூடவாவில் நடிக்கும்போது, அந்த கேரக்டருக்காக, கொஞ்சம் எடை போட வேண்டியிருந்தது. இதனால், அதிகமாக சாப்பிட்டு, எடை போட்டேன். இப்போது, "புலிவால் படத்துக்காக, ரொம்ப சிரமப்பட்டு, எடையை குறைத்து விட்டேன். இப்போது ரொம்ப ஸ்லிம் மாக காட்சி அளிக்கிறேன். ஸ்லிம்மான உடல்கட்டுதான், எனக்கு அழகாக இருப்பதாக அனைவரும் கூறுகின்றனர். இதனால், இனி வரும் படங்களில், இதே உடல்கட்டை "மெயின்டைன் செய்யப் போகிறேன் என, இனிமையாக புன்னகைக்கிறார், இனியா.