ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அஜீத்தின் 53வது படம் ஆரம்பம். இப்படத்தை பில்லா படத்தை விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். ஏ.எம்.ரத்னம் தயாரித்திருக்கிறார். இதில் அஜீத்துடன், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி, ராணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். செப்டம்பரில் ஆரம்பம் திரைக்கு வருகிறது. ஆரம்பம் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வதற்காக பத்திரிகையாளர்களை சந்தித்தார் விஷ்ணுவர்தன். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள்.
* இப்படத்தின் டைட்டிலுக்கு அதிக கால அவகாசம் எடுத்துக்கொண்டதற்கு என்ன காரணம்?
படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பிருந்தே டைட்டில் பற்றி யோசிக்கத் தொடங்கி விட்டேன். ஆனால், அப்படி யோசித்த டைட்டில்களை அஜீத் உள்பட படத்தின் முக்கியஸ்தர்களிடம் சொல்லும்போது யாருக்கும் முழு திருப்தி என்பது ஏற்படாமல் இருந்தது. அதனால், நிறைய டைட்டில்களை யோசிக்கத் தொடங்கினேன். அந்த வகையில் நூற்றுக்கணக்கான டைட்டில்களை எழுதி வைத்திருந்தேன்.
இதற்கிடையே படப்பிடிப்பும் பிசியாக சென்று கொண்டிருந்ததால் டைட்டில் மேட்டரை கடைசியில் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். படப்பிடிப்பு முடிந்த பிறகு ஒருநாள், நான் ரெடி பண்ணி வைத்திருந்த டைட்டில்களை ஹீரோ அஜீத், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் ஆகியோரிடம் தெரிவித்தபோது, அதிலிருந்த ஆரம்பம் என்ற டைட்டில் அனைவருக்குமே பிடித்தது. அதோடு கதைக்கு பொருத்தமாக இருந்ததால் இதையே வைத்து விடலாம் என்று முடிவு செய்தோம். படம் பார்க்கும்போது ஆரம்பம்தான் இந்த கதைக்கு மிகச்சரியான தலைப்பு என்று அனைவருமே சொல்வார்கள்.
* சண்டைக்காட்சிகளை படமாக்கியபோது அடிக்கடி அஜீத் விபத்தில் சிக்கியது ஏன்?
எதையுமே டூப் இல்லாமல் ரிஸ்க் எடுக்க வேண்டும் என்று அவர் நினைப்பதினால்தான், இந்த மாதிரி விபத்துக்களை சந்திக்க நேருகிறது. அந்த வகையில், துபாயில் ஒரு சண்டை காட்சியை படமாக்கியபோது அவரது கால் ஒரு கம்பிக்குள் சிக்கி மடங்கி விட்டது. இதனால் வலியால் துடித்தார் அஜீத். அதனால் படப்பிடிப்பை ரத்து செய்தோம். ஆனால், அஜீத், படப்பிடிப்பை நிறுத்த வேண்டாம் என்று சொல்லி, அந்த வலியோடு தொடர்ந்து சண்டை காட்சியில் நடித்துக்கொடுத்தார். அதேபோல் ஒரு சேஸிங் காட்சியில் போட்டில் சென்றபோதும் விபத்து ஏற்பட்டது.
* இரண்டு ஹீரோக்களை வைத்து படமெடுப்பதில் நிறைய சிரமம் இருக்குமல்லவா?
அஜீத் சாரை வைத்து பில்லா படத்தை இயக்கியிருக்கிறேன். அதனால் எங்களுக்குள் நல்ல புரிதல் உண்டு. அவர் ஒரு ஹீரோ, நானொரு டைரக்டர் என்பதையும் தாண்டி பர்சனல் ரிலேஷன்ஷிப் எங்களுக்குள் உள்ளது.
ஆர்யாவை சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் மாமன் மச்சான் போன்று ஜாலியான நண்பர்கள். அதனால்தான் ஒரே படத்தில் இரண்டு பெரிய ஹீரோக்களை வைத்து எளிதாக என்னால் வேலை வாங்க முடிந்தது.
* நயன்தாராவை பில்லா ரேஞ்சுக்கு கவர்ச்சிக் கோதாவில் இறங்கி விட்டிருப்பதாக கூறப்படுகிறதே?
பில்லாவில் எப்படி கிளாமராக நடித்தாரோ அதற்கு துளியும் குறைவில்லாத கிளாமரை இந்த படத்தில் வெளிப்படுத்தி நடித்திருக்கிறார் நயன்தாரா. அதனால் நயன்தாராவை ரசிக்கக்கூடிய கவர்ச்சிப்பிரியர்களுக்கு இந்த படம் நல்லதொரு விருந்தாக இருக்கும்.
ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ள இன்னொரு ஹீரோயினி டாப்ஸியும் ஓரளவு கிளாமராக நடித்துள்ளார். மேலும், நயன்தாரா-டாப்ஸி இருவருக்குமே சம அளவிலான வேடங்களை கொடுத்துள்ளேன்.
* மரியான் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு பாட்டு பாடிய யுவன்ஷங்கர்ராஜா, ஆரம்பம் படத்தில் ரஹ்மானை ஒரு பாடல் பாட வைத்திருப்பதாக கூறப்படுகிறதே?
இதுவரை பதிவு செய்யப்பட்ட எந்த பாடலையும் ஏ.ஆர்.ரஹ்மான் பாடவில்லை. இன்னும் ஒரு பாடல் பேலன்ஸ் உள்ளது. அதையும் வேறு சிங்கர் ஒருவர்தான் பாடுகிறார். என்னிடம் இதுபற்றி இசையமைப்பாளர் யுவன் எதுவும் சொன்னதில்லை. அதனால் இந்த செய்தி வதந்திதான். மேலும், அப்படி ரஹ்மான் தனது இசையில் பாடுவதாக இருந்தால், யுவனே தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பார்.
* பில்லா-2, விஸ்வரூபம்-2, சிங்கம்-2 வரிசையில், ஆரம்பம்-2 உருவாக வாய்ப்பு உள்ளதா?
தமிழில் தயாராகியுள்ள இப்படத்தை தெலுங்குக்கு டப் செய்து வெளியிடுகிறோம். மற்றபடி, இரண்டாம் பாகம் எடுப்பது பற்றி எந்த திட்டமும் இப்போதைக்கு இல்லை.
இவ்வாறு விஷ்ணுவர்தன் கூறினார்.