Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராகவா லாரன்ஸ் மீது நடன பெண் இயக்குனர் மதியம் புகார் - மாலையில் வாபஸ்!!

03 ஆக, 2013 - 11:21 IST
எழுத்தின் அளவு:

நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் தனது குடும்பத்தாரிடமிருந்து பாதுகாப்பு கேட்டு விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் கொடுத்த நடன பெண் துணை இயக்குனர், திடீரென மனுவை வாபஸ் பெற்றார்.

சென்னை அசோக் நகர் 3வது குறுக்கு தெருவை சேர்ந்த பார்த்திபன் மகள் செல்வராணி (31), விழுப்புரம் எஸ்.பி., மனோகரனிடம் நேற்று அளித்த மனு : சினிமா நடன துணை இயக்குனராக பணியாற்றி வருகிறேன். சினிமா நடிகர் ராகவா லாரன்ஸ்க்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. என்னை திருமணம் செய்வதாகக் கூறி, 12 ஆண்டுகளாக என்னுடன் குடும்பம் நடத்தினார். நானும், அவரது முதல் மனைவி லதாவும் ஒரே வீட்டில் வசித்தோம். பின், என்னை திருமணம் செய்ய மறுத்ததோடு, குழந்தை பெற்றுக் கொள்வதற்கும் மறுத்தார். இதனால், எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. எனது குடும்பத்தினர் வற்புறுத்தியும் என்னை திருமணம் செய்ய மறுத்தார். அதனால், விழுப்புரம் வந்து விட்டேன். எனது குடும்பத்தார் மூலமும், ராகவா லாரன்ஸ் மூலமும் எனக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க, பாதுகாப்பு அளிக்க வேண்டுகிறேன். இவ்வாறு அந்த மனுவில் செல்வராணி கூறியிருந்தார்.

திடீர் வாபஸ் : விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் பகல் 12: 00 மணிக்கு புகார் அளித்த செல்வராணி, மாலை 5:00 மணிக்கு மனுவை திடீரென வாபஸ் பெற்றார். அடுத்த அரை மணி நேரத்தில், செல்வராணியை தேடி, அவரது அக்கா விஜயராணி அங்கு வந்தார். இவர், செல்வராணியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு எஸ்.பி., யிடம் மனு கொடுத்தார். இது குறித்து டவுன் டி.எஸ்.பி., சங்கர், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்தனர். மாலை 5:00 மணிக்கு தனது குடும்பத்தினருடன் செல்வதாக செல்வராணி கூறியதன் பேரில், அனுப்பி வைக்கப்பட்டார். பாதுகாப்பு கேட்டு கொடுத்த புகார் மனுவை செல்வராணி வாபஸ் பெற்றார். இச்சம்பவத்தின்போது, செல்வராணியுடன் வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த பாலமுருகன், விசாரணைக்குப் பின், வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

Arumugam - Paris,பிரான்ஸ்
03 ஆக, 2013 - 23:24 Report Abuse
Arumugam இதெல்லாம் சினிமாவில் சகஜம். படத்த பார்த்தோமா,ரசித்தோமா என்று போங்கள். நடிகர்களை பற்றி யோசிப்பது வீண்.
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
04 ஆக, 2013 - 18:16Report Abuse
சு கனகராஜ் இந்த லட்சணத்துல ஊனமுற்றோருக்கு இவரு உதவுராராம் ?...
Rate this:
raffi - chennai  ( Posted via: Dinamalar Windows App )
03 ஆக, 2013 - 20:33 Report Abuse
raffi கடவுள்க்கு தான் வெளிச்சம்
Rate this:
appu - madurai,இந்தியா
03 ஆக, 2013 - 15:37 Report Abuse
appu அடப்பாவிகளா???இந்தப் பூனையும் பால் குடிக்குமா???யாரை தான் நம்புவதோ>>>>>>>>>>ரஜினி சார் உங்க ரசிகர் ஒருவரின் உண்மை முகம் பொது மக்கள் கண்டுவிட்டார்கள்...நீங்கள் கண்டீரா?
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
03 ஆக, 2013 - 21:12Report Abuse
சு கனகராஜ் ராகவேந்தரின் பக்தனா இப்படி ?...
Rate this:
appu - madurai,இந்தியா
04 ஆக, 2013 - 16:01Report Abuse
appuஅவுருக்கு,,,பக்தி முக்திருச்சு போல கனகு அண்ணா......
Rate this:
LAX - Trichy,இந்தியா
03 ஆக, 2013 - 14:37 Report Abuse
LAX ஒண்ணுமே புரியலே.... ஒலகத்திலே.... இவங்க இஷ்டத்துக்கு வரைமுறையே இல்லாமல் ரிலேஷன்ஷிப் வெச்சுக்கிட்டு கடைசில போலீஸ்கிட்ட வந்து பாதுகாப்பு குடுங்கன்னு மனு குடுக்குறாங்க. என்னதான் செய்யறது எதுக்குதான், எவ்ளோ பேருக்குதான் பாதுகாப்பு குடுக்கறது..?
Rate this:
Kubrikan - Singapore  ( Posted via: Dinamalar Android App )
03 ஆக, 2013 - 13:58 Report Abuse
Kubrikan ஒழுக்கங் கெட்டவர்கள் மலிந்த இடம்தானே சினிமா உலகம். முறை தவறிச் சோரம் போய்க் குடும்பம் நடத்துவது அங்குக் காலம்காலமாக நடப்பதுதானே!
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in