ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் கபிலன். சில குறும்படங்களையும் இயக்கினார். சொந்தமாக படம் இயக்க வேண்டும் என்ற அவரது ஆசையும் நிறைவேறியது. கபிலன் சே என்று பெயர் மாற்றி கருவி என்ற படத்தை இயக்கினார். ஆக்ஷன் திரில்லர் படமாக அது உருவானது. என்ன பிரச்னை என்றே தெரியவில்லை படம் ரிலீசாகவில்லை.
கருவி படத்தை தனது கனவு படமாக நினைத்திருந்த கபிலனுக்கு அது வெளிவராமல் முடங்கிக் கிடந்தது பெரும் துக்கத்தை ஏற்படுத்தியது. முதல் படம் வெளிவராததால் அடுத்த படம் கிடைக்கவில்லை. இதனால் பெரும் பணநெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் கபிலனின் தங்கை திருமணத்திற்காக அவரது பெற்றோர் பணம் கேட்டுள்ளனர். அதனையும் அவரால் கொடுக்க முடியவில்லை, இதனால் மனம் ஒடிந்து போன கபிலன் தன் மனைவி சந்தியாவை வியாசர்பாடியில் உள்ள அவரது தாயார் வீட்டுக்கு அனுப்பி விட்டு வளசரவாக்கம் திருமலைநகர் வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கிறார்.
தனிமையும், வறுமையும் வாட்டி எடுக்க தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்திருக்கிறார். தன் மனைவிக்கு போன் செய்து எனக்கு வாழ பிடிக்கவில்லை. தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று கூறியிருக்கிறார். இதனால் மனைவி சந்தியா பதறி அடித்து ஓடி வந்திருக்கிறார். அதற்குள் கபிலன் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுவிட்டார். இந்த சம்பவம் குறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையில் நடிகை கனகா விஷயத்தில் ஏற்பட்ட குழப்பம் போன்று கபிலன் தற்கொலை விஷயத்திலும் நடந்தது. கலைந்த கனவுகள் என்ற படத்தை இயக்கி வருபவரின் பெயரும் கபிலன்தான். இவர்தான் தற்கொலை செய்து கொண்டார் என்று செய்திகள் வந்தன. மாலையில் நான் உயிரோடு இருக்கிறேன் என்று பேட்டியளித்தார் கலைந்த கனவுகள் கபிலன்.