ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
குளோபல் ரிமோட் என்ற சர்வதேச ஆயில் நிறுவனம் புல் ஹவுஸ் எண்டர்டெயின்மெண்ட் என்ற கிளையை ஏற்படுத்தி அதன் மூலம் பல மொழிப் படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக மனதில் மாயம் செய்தாய் என்ற படத்தை தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாரிக்கிறது. பிரின்ஸ் என்ற தெலுங்கு நடிகர் ஹீரோ, தமிழ் படம் திஷாபாண்டே ஹீரோயின். இவர்களுடன் மைனா சேது, ரிச்சா இன்னொரு ஜோடியாக நடிக்கிறார்கள். பி.சுரேஷ் என்ற புதுமுகம் இயக்குகிறார்.
படத்தின் தயாரிப்பாளர்கள் ஜெய்சன், வின்சி ஆகியோர் கூறியதாவது: எங்கள் நிறுவனம் உலகம் முழுவதும் எண்ணெய் வியாபாரம் செய்கிறது. 7 நாடுகளில் எங்களுக்கு அலுவலகம் உள்ளது. தலைமை அலுவலகம் துபாயில் உள்ளது. எண்ணெய் வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்தைக்கொண்டு சினிமா தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிச்சிருக்கோம். மனதில் மாயம் செய்தாய் முதல் படம். அடுத்து டாப் ஹீரோக்கள் நடிக்க பிரமாண்ட படம் ஒன்றை தயாரிக்கிறோம். எழுத்தாளர் ஜெயமோகனின் கதை. மலையாள இயக்குனர் ஒருவர் இயக்குகிறார். அடுத்து ஒரு தெலுங்கு படமும் தயாரிக்க இருக்கிறோம். ஆஸ்திரேலிய இயக்குனர் லூசியின் இயக்கத்தில் ஹாலிவுட் படம் ஒன்றையும் தயாரிக்க இருக்கிறோம் என்றனர்.