பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
நடிகர் திலகம் சிவாஜி, நடிகையர் திலகம் சாவித்ரி, காதல் மன்னன் ஜெமினி கணேசன் நடித்த படம் பாசமலர். சென்டிமெண்ட் படங்களின் தாய் படமான இது, அந்தக் காலத்திய வெள்ளி விழா படம். அண்ணன்-தங்கை பாசத்துக்கு இப்போதும் உதாரணமாக இருக்கும் படம். கர்ணன், வசந்தமாளிகை வரிசையில் பாசமலரையும் லேட்டஸ்ட் டெக்னாலஜியை பயன்படுத்தி டிஜிட்டல் ஆக்கியிருப்பதோடு சினிமாஸ்கோப்பாகவும் மாற்றி இருக்கிறார்கள். அகில இந்திய சிவாஜி மன்றத் தலைவர் பூமிநாதன் இந்த பணியைச் செய்துள்ளார். ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று ரிலீசாகிறது.
இதன் டிரைய்லர் வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நடந்தது. சிவாஜியின் மகன்கள் பிரபு, ராம்குமார், மகள் தேன்மொழி ஆகியோர் வெளியிட ஜெமினி கணேசன் மகள் கமலா செல்வராஜ், சாவித்ரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பின்னர் டிரைய்லர் வெளியிடப்பட்டது. அகன்ற திரையில் பாசமலரைப் பார்த்த சிவாஜி குடும்பத்தினர் கண்களில் கண்ணீர் கொட்டியது.
பிறகு பிரபு பேசியதாவது: அப்பாவின் உயர்மூச்சு ரசிகர்கள்தான். அவரையும் வாழ வைத்தீர்கள், எங்களையும் வாழ வைத்தீர்கள். இப்போது என் மகனையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்பாவின் ரசிகர்கள் இருக்கும்வரை எங்கள் குடும்பத்திற்கு எந்த கவலையும் இல்லை. உங்களை எங்கள் குடும்பம் உயிர் உள்ளவரை மறக்காது. அப்பாவுக்கு கேமராவுக்கு முன்னால்தான் நடிக்கத் தெரியும், கேமராவுக்கு பின்னால் நடிக்கத் தெரியாது. எங்களையும் அப்படித்தான் வளர்த்திருக்கிறார். இவ்வாறு பிரபு உணர்ச்சி பொங்க பேசினார்.