ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். அதே வேகத்தில் ஹாலிவுட் சினிமாவுக்குள்ளும் நுழைந்து ஒரே படத்தில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை தட்டி வந்தார். இதனால் இந்திய திரையுலகமே அவரை ஆச்சர்யத்துடன் பார்த்தது. அப்படிப்பட்ட ரஹ்மான், சமீபகாலமாக ஹாலிவுட் முகாமை மாற்றி மீண்டும் சென்னைக்கே வந்து விட்டார்.
அதற்கு அவர் காரணமாக சொல்லும்போது, பேமிலியை விட்டு பிரிந்து இருப்பதால் என் பிள்ளைகளை ரொம்ப மிஸ் பண்றேன். அதனால் இனிமேல் உள்ள நாட்களில் அவர்களுடன் இருந்தபடியே இசைப்பணியை மேற்கொள்ளப்போகிறேன் என்றார். அதையடுத்து, ரஜினியின் கோச்சடையான், மரியான் உள்பட சில படங்களில் கமிட்டாகி மீண்டும் தமிழ் மற்றும் இந்தி சினிமாக்களில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்.
ஆனால் இந்த நேரத்தில் தி செவன்த் சன் என்றொரு ஹாலிவுட் படத்துக்கு இசையமைக்க ஒத்துக்கொண்டிருந்த ஏ.ஆர்.ரஹ்மான், இப்போது அந்த படத்திலிருந்து விலகியிருக்கிறார். இந்திய படங்களுக்கு இசையமைக்கவே நேரம் பற்றாக்குறையாக இருப்பதால், அந்த படத்திற்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் இசையமைத்துக்கொடுக்க என்னால் முடியாது என்பதால் விலகிவிட்டேன் என்றும் அதற்கான காரணத்தை சொல்லியிருக்கிறார் ரஹ்மான்.