ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் அஜீத். அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அதோடு சினிமா உலகில் நிறையபேருக்கு உதவிகள் செய்கிறார். இதனால் அவரை தமிழ்நாட்டைச்சேர்ந்தவர்களுக்கு பிடிக்கிறது ஆனால், இப்போது மாநிலம் கடந்து அஜீத்தை பெருமையாக பேசத் தொடங்கிவிட்டார்கள்.
அப்படித்தான் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் ஸ்ரீதேவிக்காக சிறிய ரோலில் நடித்த அஜீத், அதற்காக சம்பளமே வாங்கிக்கொள்ளவில்லை. அதனால், அந்த நன்றிக்கடனை இன்றுவரை மறக்காத ஸ்ரீதேவி, அஜீத்தை பெருமையாக சொல்வதோடு, அவருடன் மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருப்பதாகவும் கூறி வருகிறார்.
இந்தநிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஷாரூக்கான் இந்தியில் நடித்த அசோகா என்ற படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் அஜீத் நடித்திருந்தார். ஆனால் அதற்காகவும் அவர் சம்பளமே வாங்கிக்கெள்ளவில்லையாம். அதை சமீபத்தில் நினைவுகூர்ந்துள்ளார் ஷாரூக்கான். அப்போதைக்கு அஜீத்தை நான் சிறிய நடிகர் என்றுதான் நினைத்தேன். ஆனால் சமீபகாலமாக தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வந்து சென்றபிறகுதான் அவர் பெரிய ஹீரோ என்பதை தெரிந்து கொண்டேன். ஆனபோதும், எந்த பந்தாவும் இல்லாமல் எளிமையாக அவர் என்னுடன் பழகி என் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார் என்று அஜீத் பற்றி சொல்கிறார் ஷாரூக்.