பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
தமிழில் நடிக்கிற படங்களெல்லாம் ப்ளாப்பாகிக் கொண்டிருந்ததால் ஒரு மாறுதலுக்காக ஆந்திர சினிமாவுக்கு சென்றார் பூர்ணா. அங்கு இருக்கிற அசைவ கலாச்சாரம் இவருக்கு ஒத்துவரவில்லை. இருந்தாலும் மிதமான கிளாமர் கொண்ட கதைகளாக சில படங்களில் நடித்தவர், தொடர்ந்து தாக்குப்பிடிக்க முடியாமல் கோடம்பாக்கத்துக்கே ரிட்டன் ஆகிவிட்டார்.
அப்படி வந்தவருக்கு ஜன்னல் ஓரம் படத்தில் ஒரு வித்தியாசமான கேரக்டரை கொடுத்தார் கரு.பழனியப்பன். இதே படத்தில் தன்னை விட ஜூனியர் நடிகை மனீஷா கதாநாயகி என்றபோதும், ஈகோ பார்க்காமல் அந்த வேடத்தில் நடித்த பூர்ணாவுக்கு இப்போது பெரிய நம்பிக்கை தரும் படமாக படம் பேசும் என்ற படம் கிடைத்துள்ளது.
இந்த படத்தில் நாயகனாக நடிப்பது டைரக்டர் பி.வாசுவின் மகன் ஷக்தி. என்றாலும், பூர்ணாவின் கேரக்டர் இதுவரை நடித்த யூசுவலான கதாநாயகி போல் இல்லாமல், அடர்ந்த காட்டுப்பகுதியில் சிக்கிக்கொண்டு தவிக்கும் வேடமாம். அதனால் எனக்கு நடிப்பதற்கு நிறைய ஸ்கோப் உள்ளது என்று சொல்லும் பூர்ணா, இந்த படம் கண்டிப்பாக என்னை பேச வைக்கும். இதன்பிறகு தமிழில் ஒரு பெரிய ரவுண்டு வராமல் நான் ஓயமாட்டேன் என்று ஓவர் நம்பிக்கையோடு சொல்கிறார்.