ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வத்திக்குச்சி, சேட்டை படங்களிலேயே உடல் பெருத்து காணப்பட்டார் அஞ்சலி. அதையடுத்து குடும்பத்தில் நடந்த சலசலப்பு காரணமாக உடம்பை பராமரிப்பதில் அவருக்கிருந்த நாட்டம் குறைந்து விட்டதாம். அதனால், இப்போது தெலுங்கில் நடித்து வரும் அஞ்சலி, இடுப்பு பெருத்து உருண்டு திரண்டு போயிருக்கிறாராம். இதனால் கடந்த சில மாதங்களாக கட்டுப்பாடில்லாமல் இருந்த அஞ்சலி, இப்போது டயட்டை கடுமையாக கடைபிடிக்கத் தொடங்கியிருக்கிறாராம். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஜிம்முக்கு சென்றால் வீட்டுக்கு வரவே மறுக்கிறாராம். அதேபோல் படப்பிடிப்பு தளங்களில் ஓய்ந்து உட்காருவதை தவிர்த்துவிட்டு அங்குள்ள இளவட்ட நடிகர்-நடிகைகளை திரட்டி பேஸ்கட் பால், கிரிக்கெட் என்று ஏதாவது விளையாடிக்கொண்டேயிருக்கிறாராம். என்றாலும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பெருத்துவிட்ட அஞ்சலியின் உடம்பு இறங்க மாட்டேன் என்று அடம்பிடிக்கிறதாம்.