ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஜெயா டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு சொன்னது நீதானே என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. பரபரப்பான மும்பையில் தங்களுடைய மூன்று குழந்தைகளோடு வசித்து வரும் பிரதீப்–மோனா தம்பதிகள் தங்களின் 12 வருட வாழ்க்கையில் நிறைய ஏற்ற, இறக்கங்களை சந்திக்கின்றனர். பிரதீப் தன்னுடைய தந்தையின் கட்டுப்பாட்டிலிருந்து பிரிந்து சுதந்திரமாக வாழ ஆசைப்படுகிறான். அதற்காக நகரத்தில் ஒரு வீட்டை வாங்கி தன் குடும்பத்தோடு குடியேறுகிறான். மோனா தன்னுடைய நிர்வாகத் திறமையால் வீட்டையும் குழந்தையையும் அன்புடன் கவனித்துக்கொள்கிறாள்.
இங்கு தான் சிக்கலே. குழந்தைகளிடம் மோனா எடுத்துக்கொள்ளும் அதிகபட்ச நேரம் பிரதீப்பை பாதிக்கிறது. குழந்தையின் மீதான மனைவியின் அதிகபட்ச கவனம் தன்னுடைய உணர்வுகளை புறக்கணிப்பதாக அவனை எண்ண வைக்கிறது. இதனால் தம்பதிகளுக்கிடையே விரிசல் ஆரம்பிக்கிறது. இந்த நேரத்தில் பிரதீப் பணி புரியும் நிறுவனத்தில் முதலாளியாக அவனது முன்னாள் காதலி அனுஷ்கா நுழைகிறாள். கல்லூரி நாட்களில் பிரதீப்பின் காதலை ஏற்க மறுத்தவள் இவள். ஆனால், அந்த அனுஷ்கா இப்போது பிரதீப்பிடம் எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் அவனது சட்ட பூர்வமற்ற காதலை ஏற்கிறாள். இதனால் அவள் மீதான மோகத்தில் வீட்டை விட்டு வெளியேறும் பிரதீப், மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்புகிறான். இந்த சூழ்நிலையில் மோனா குழந்தைகளை வைத்துக் கொண்டு என்ன செய்யப்போகிறாள்? விறுவிறுப்பான கோணத்தில் செல்கிறது தொடர்.