நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் காமெடிக்கு திரும்பிய வீர தீர சூரன் வில்லன் நடிகர் | 12 நாட்கள் குளிக்காமல் படப்பிடிப்பிற்கு சென்றேன் : உண்மையை உடைத்த அமீர்கான் | தொடர் வெற்றி : அடுத்தடுத்து வெளியாகும் சசிகுமார் படங்கள் | கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு | பாகிஸ்தான் சார்ந்த ஓடிடி 'கன்டென்ட்' - தடை விதித்த மத்திய அரசு | சிம்ரனை தொடர்ந்து இலங்கை தமிழ் பேசும் தேவயானி | தக் லைப் அப்பா, மகன் மோதல் கதையா? | ஹீரோ ஆனார் கேபிஒய் பாலா |
யோகி படத்திற்கு பிறகு டைரக்டர் அமீர், மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். அப்படத்திற்கு "பேரன்பு கொண்ட பெரியோர்களே" என்று பெயர் வைத்துள்ளனர். "மெளனம் பேசியதே"-வில் தொடங்கி "ஆதிபகவன்" படம் வரை தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் டைரக்டர் அமீர். இயக்குனராக மட்டுமல்லாமல் "யோகி" படத்தில் ஹீரோவாகவும், மிஸ்கினின், "யுத்தம் செய்" படத்தில் கன்னித்தீவு பொண்ணா... என்று பாட்டுக்கு நடனம் ஆடியும் அசத்தினார். டைரக்டர், பெப்சி சங்க தலைவர் என்று பிஸியாக இருக்கும் அமீர், சமீபத்தில் நடந்த இயக்குனர் சங்க தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக சினிமாவில் கவனம் செலுத்த உள்ளார்.
உதவி இயக்குனராக இருக்கும் ஆதம்பாவா என்பவரது தயாரிப்பில், சந்திரன் என்பவர் இயக்கும் "பேரன்பு கொண்ட பெரியோர்களே" படத்தில், அமீர் ஹீரோவாக நடிக்க போகிறார். இப்படம் அரசியல் கலந்த காமெடி படமாக உருவாக இருக்கிறது. படத்தில் அமீருக்கு ஜோடியாக "555"-ல் நடித்துள்ள மிருத்திகா நடிக்க இருக்கிறார். விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் மதுரையில் ஆரம்பமாக இருக்கிறது.