'அஅஅ' படத்தின் முதல் ஹீரோயினாக மிருணாள் தாகூர் ஒப்பந்தம்? | திருடனாக நடித்தது சுவாரஸ்யமாக இருந்தது : சைப் அலிகான் | சூர்யாவின் 'ரெட்ரோ' விழாவில் விஜய் தேவரகொண்டா | சீமானின் தர்மயுத்தம் : மே மாதம் ரிலீஸ் | சிம்புவுக்கு நோ சொல்லமாட்டேன் : சந்தானம் | லோகேஷின் எல்சியு.,வில் ஒரு பகுதியாக இருந்தால் மகிழ்ச்சியடைவேன் - நடிகர் நானி | விஜய் சேதுபதி, பூரி ஜெகநாத் படத்தின் தலைப்பு இதுவா? | காப்புரிமை வழக்கு : ஏஆர் ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த ஐகோர்ட் உத்தரவு | ஜெயிலர்-2 படப்பிடிப்பு தளத்துக்கு செல்லும் வழியில் ஸ்ரீ மாதேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்த ரஜினிகாந்த்! | ரெட்ரோ' படத்தைப் பார்த்துவிட்டு சூர்யா கொடுத்த கமெண்ட்! |
பாலிவுட்டின் முன்னணி தொலைக்காட்சி நடிகை தீபிகா கர்கர். சில படங்களிலும் நடித்துள்ளார், இசை ஆல்பங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். இவர் தற்போது தனது இரண்டாவது கணவர் சோயப் இப்ராஹிமோடு வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு ருஹான் என்ற மகள் இருக்கிறாள்.
தீபிகா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் காஷ்மீருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் சுற்றுலா சென்றார். அங்கு எடுத்த வீடியோக்கள், படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய இதே இடத்தில் அதற்கு ஒரு மணி நேரம் முன்பு வரை தீபிகா தனது குழந்தை, கணவருடன் இருந்துள்ளார். அவர்கள் திட்டமிட்டதற்கு முன்பாகே அந்த இடத்தை விட்டு சென்றதால் தீபிகா குடும்பம் உயிர் தப்பியது.
இதுகுறித்து அவர் கூறும்போது, "சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்கு முன்பாக தான் அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு சென்றோம். இந்த சம்பவத்தால் மனம் பதைக்கிறது. இன்னும் நாங்கள் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை" என்றார்.
தொடர்ந்து தீபிகா கக்கர் - சோயப் தம்பதி காஷ்மீர் சுற்றுப்பயணத்தை உடனடியாக முடித்துக்கொண்டு மும்பை திரும்புகிறார்கள். பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு நடிகர் - நடிகைகள் உள்பட திரையுலகினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.