Advertisement

சிறப்புச்செய்திகள்

'அஅஅ' படத்தின் முதல் ஹீரோயினாக மிருணாள் தாகூர் ஒப்பந்தம்? | திருடனாக நடித்தது சுவாரஸ்யமாக இருந்தது : சைப் அலிகான் | சூர்யாவின் 'ரெட்ரோ' விழாவில் விஜய் தேவரகொண்டா | சீமானின் தர்மயுத்தம் : மே மாதம் ரிலீஸ் | சிம்புவுக்கு நோ சொல்லமாட்டேன் : சந்தானம் | லோகேஷின் எல்சியு.,வில் ஒரு பகுதியாக இருந்தால் மகிழ்ச்சியடைவேன் - நடிகர் நானி | விஜய் சேதுபதி, பூரி ஜெகநாத் படத்தின் தலைப்பு இதுவா? | காப்புரிமை வழக்கு : ஏஆர் ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த ஐகோர்ட் உத்தரவு | ஜெயிலர்-2 படப்பிடிப்பு தளத்துக்கு செல்லும் வழியில் ஸ்ரீ மாதேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்த ரஜினிகாந்த்! | ரெட்ரோ' படத்தைப் பார்த்துவிட்டு சூர்யா கொடுத்த கமெண்ட்! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: மேடை நாடகம், வெள்ளித்திரை இரண்டிலும் முத்திரை பதித்த “வியட்நாம் வீடு”

21 ஏப், 2025 - 11:25 IST
எழுத்தின் அளவு:
Flashback-“Vietnam-Veedu”-which-left-its-mark-on-both-stage-and-screen


சென்னை நாடக அரங்குகளை அமெச்சூர் நடிகர்கள், அதாவது பெரிய உத்யோகங்களில் இருப்பவர்கள் குறிப்பாக பிராமண சமூகத்தைச் சார்ந்தவர்களின் நாடகங்கள் ஆக்கிரமித்திருந்த காலம். கதை எழுதியவர்களும், நடத்தியவர்களும், நடித்தவர்களும் அவர்களே. நாடகத்தைப் பார்க்கின்ற சபா உறுப்பினர்களில் பெரும்பான்மையினரும் அவர்களாகவே இருக்க, இயல்பாகவே சபா நாடகங்கள் பிராமண சமூகத்தைச் சேர்ந்த கதைகளாகவே அமைந்திருந்தன.

பிராமணரல்லாத கலைஞர்களான தொழில்முறை நடிகர்களின் நாடகங்களுக்கு மேடை கிடைப்பதே அரிதாயிருந்த காலம் வேறு. கால மாறுதல்களை அனுசரித்து நாடகங்களில் புதிய உத்திகளை பயன்படுத்த தொழில்முறைக் கலைஞர்கள் தவறவிட்டிருந்ததும் அவர்களது சரிவுக்கு காரணமாகவும் அமைந்திருந்தன. இந்த சூழ்நிலையில் மிக நீண்ட வசனங்களுடன் தஞ்சை வாணனின் “களம் கண்ட கவிஞன்” என்ற நாடகத்தை தனது சிவாஜி நாடக மன்றத்தின் மூலம் அரங்கேற்றித் தொடர்ந்து நடத்த அரங்கமின்றி இருந்து வந்தார் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்.

சபாக்களில் தொடர்ந்து நாடகம் கிடைக்க வேண்டுமென்றால் பிராமண சமூகக் கதையாக இருக்க வேண்டும் என்று நாடகக் குழு உறுப்பினர்கள் சிவாஜியிடம் கூறத் தொடங்க, அப்போது பிராமண இளைஞரான கே சுந்தரம் என்பவர் ஒரு குடும்பக் கதையை நாடகமாக எழுதி சிவாஜிகணேசனிடம் கொடுத்தார். நாடகத்தில் பிரஸ்டீஜ் பத்மநாப அய்யர் குடும்பத் தலைவர். அன்பே உருவான அவரது மனைவி. இரு மகன்கள் ஒருவன் ஊருக்கு நல்லவனாகவும், வீட்டிற்கு சூறாவளியை உருவாக்குகின்றவனாகவும், இன்னொருவன் வீட்டிற்கு நல்லவனாகவும், வெளியில் கெட்டவனாகவும் இருக்க, மகளாலும், மருமகளாலும் வேறு வீட்டில் பிரச்னைகள் வர, சதா கலவரமும், குழப்பமும் நிறைந்திருக்கும் இந்த நிலையில் வீட்டின் தலைவரான பிரஸ்டீஜ் பத்மநாப அய்யர் பணி ஓய்வு பெற்று வீடு திரும்ப, அவரது பிரஸ்டீஜுக்கும் இழுக்கு நேரிடுகிறது. சதா கலவரமும், ரகளையுமாக வீடு இருப்பதால் அந்த நாடகக் கதைக்கு “வியட்நாம் வீடு” என்று பெயரிட்டிருந்தார் கதையை எழுதிய கே சுந்தரம்.

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பிரஸ்டீஜ் பத்மநாப அய்யராக நாடக மேடை ஏறியதும் சிவாஜி நாடக மன்றத்துக்குத் தொடர்ந்து நாடகங்கள் கிடைக்கவும் தொடங்கின. சபாக்காரர்கள் தொடர்ந்து தேதி கொடுத்து வர, நாடகம் பெரும் வெற்றி பெற்றது. இந்த நாடகத்தை திரைப்படமாக்கவும் ஆசைப்பட்டார் சிவாஜிகணேசன். தனது “சிவாஜி பிலிம்ஸ்” மூலம் இந்த நாடகக் கதையை 1970ல் “வியட்நாம் வீடு” என்ற பெயரிலேயே சினிமாவாகவும் எடுத்து வெளியிட்டார் சிவாஜி. நாடகத்தில் அவர் ஏற்று நடித்திருந்த பிரஸ்டீஜ் பத்மநாப அய்யராக சிவாஜி நடிக்க, அவரது மனைவியாக மடிசார் கட்டிக் கொண்டு 'நாட்டியப் பேரொளி' பத்மினி நடிக்க, வெள்ளித்திரையிலும் விழா கண்டது இத்திரைப்படம். இதன் பின்னர் இந்த நாடகக் கதாசிரியரான கே சுந்தரம் தனது பெயரோடு வியட்நாம் வீட்டையும் இணைத்து “வியட்நாம் வீடு” சுந்தரம் என அழைக்கப்பட்டு புகழ் பெற்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இப்போதைக்கு நான் சாக விரும்பவில்லை : விரக்தியில் பிரபல பாடகர்இப்போதைக்கு நான் சாக விரும்பவில்லை : ... சிவாஜி வீடு பிரபுவிற்கு சொந்தம் : வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவு ரத்து சிவாஜி வீடு பிரபுவிற்கு சொந்தம் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in