'அஅஅ' படத்தின் முதல் ஹீரோயினாக மிருணாள் தாகூர் ஒப்பந்தம்? | திருடனாக நடித்தது சுவாரஸ்யமாக இருந்தது : சைப் அலிகான் | சூர்யாவின் 'ரெட்ரோ' விழாவில் விஜய் தேவரகொண்டா | சீமானின் தர்மயுத்தம் : மே மாதம் ரிலீஸ் | சிம்புவுக்கு நோ சொல்லமாட்டேன் : சந்தானம் | லோகேஷின் எல்சியு.,வில் ஒரு பகுதியாக இருந்தால் மகிழ்ச்சியடைவேன் - நடிகர் நானி | விஜய் சேதுபதி, பூரி ஜெகநாத் படத்தின் தலைப்பு இதுவா? | காப்புரிமை வழக்கு : ஏஆர் ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த ஐகோர்ட் உத்தரவு | ஜெயிலர்-2 படப்பிடிப்பு தளத்துக்கு செல்லும் வழியில் ஸ்ரீ மாதேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்த ரஜினிகாந்த்! | ரெட்ரோ' படத்தைப் பார்த்துவிட்டு சூர்யா கொடுத்த கமெண்ட்! |
கன்னட திரை உலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ராகிணி திவேதி. இவர் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் சிக்கி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அதையடுத்து மீண்டும் திரைப்படங்களில் ராகினி திவேதி நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பெங்களூருவில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் நடிகை ராகினி திவேதி கலந்து கொண்டார். அப்போது அவருடன் செல்பி எடுக்கவும், ஆட்டோகிராப் வாங்கவும் ரசிகர்கள் முண்டியடித்தனர். ஒரு ரசிகர், ராகினி திவேதியின் கையை பிடித்து இழுத்தார்.
இதனால் கோபமடைந்த நடிகை ராகினி திவேதி உடனே அந்த ரசிகரை கடுமையான வார்த்தைகளால் ஆங்கிலத்தில் திட்டியதோடு அவரது கன்னத்தில் பலமாக அறைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே பாதுகாவலர்கள் அந்த ரசிகரை அங்கிருந்து வெளியேற்றினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.