'அஅஅ' படத்தின் முதல் ஹீரோயினாக மிருணாள் தாகூர் ஒப்பந்தம்? | திருடனாக நடித்தது சுவாரஸ்யமாக இருந்தது : சைப் அலிகான் | சூர்யாவின் 'ரெட்ரோ' விழாவில் விஜய் தேவரகொண்டா | சீமானின் தர்மயுத்தம் : மே மாதம் ரிலீஸ் | சிம்புவுக்கு நோ சொல்லமாட்டேன் : சந்தானம் | லோகேஷின் எல்சியு.,வில் ஒரு பகுதியாக இருந்தால் மகிழ்ச்சியடைவேன் - நடிகர் நானி | விஜய் சேதுபதி, பூரி ஜெகநாத் படத்தின் தலைப்பு இதுவா? | காப்புரிமை வழக்கு : ஏஆர் ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த ஐகோர்ட் உத்தரவு | ஜெயிலர்-2 படப்பிடிப்பு தளத்துக்கு செல்லும் வழியில் ஸ்ரீ மாதேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்த ரஜினிகாந்த்! | ரெட்ரோ' படத்தைப் பார்த்துவிட்டு சூர்யா கொடுத்த கமெண்ட்! |
2007ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கிய முதல் படம் 'சென்னை -28'. கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டு அவர் இயக்கிய இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதன் பிறகு சரோஜா, கோவா போன்ற படங்களை இயக்கியவர், பின்னர் அஜித் நடிப்பில் 'மங்காத்தா' படத்தை இயக்கும் வாய்ப்பினை பெற்றார். அந்த படமும் சூப்பர் ஹிட்டாக அமைந்த நிலையில், 2016ம் ஆண்டு தனது முதல் படமான 'சென்னை- 28' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார் வெங்கட்பிரபு.
இந்நிலையில் தற்போது, 'மாநாடு, கஸ்டடி, கோட்' படங்களுக்கு பிறகு சென்னை- 28 படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கப் போகிறார். முதல் இரண்டு பாகங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்த ஜெய், மிர்ச்சி சிவா, நிதின் சத்யா, பிரேம்ஜி ஆகியோரே இந்த படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.