பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
வாமனன் படத்தில் ஜெய்யுடன் நடித்தவர் ப்ரியா ஆனந்த். அந்த படத்தின் தோல்வி காரணமாக அடுத்து கோலிவுட் படமில்லாமல் தெலுங்கு, இந்தி வரை சென்றார் ப்ரியா. ஆனால், எந்த மொழியிலும் அவரால் பரபரப்பான நடிகையாக முடியவில்லை. அதனால் மீண்டும் தமிழுக்கு வந்த அவர், 180, இங்கிலீஷ் விங்கிலீஷ், எதிர்நீச்சல் ஆகிய படங்களில் நடித்தார். இதில் எதிர்நீச்சல் படம் ப்ரியா ஆனந்தை பேச வைத்ததால், இப்போது அதிரடியாக சில படங்களை கைப்பற்றி விட்டார்.
இதனால் புதிய படங்களில் நடிக்க அவர் தனது படக்கூலியை ஒரு கோடியாக உயர்த்தி விட்டதாக செய்திகள் பரவியுள்ளன. ஆனால் இந்த செய்தியால் அதிர்ச்சியடைந்து போயிருக்கிறார் ப்ரியா ஆனந்த். காரணம், ஒரு கோடி ரூபாய் தந்தால்தான் நடிப்பேன் என்று கறாராக பேசும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய நடிகை இல்லை. இப்போதும் எனக்கென தயாரிப்பாளர்களாக என்ன சம்பளம் நிர்ணயிக்கிறார்களோ அதைத்தான் வாங்கிக்கொண்டு வருகிறேன் என்று சொல்லும் ப்ரியாஆனந்த், இன்னும் நான் 50 லட்சத்தைகூட தொடவில்லை என்கிறார்.
மேலும், சில நடிகைகளெல்லாம் வந்து ஓரிரு படங்களிலேயே கோடியை தொட்டு விடுகிறார்கள். ஆனால் நான் சினிமாத்துறைக்குள் வந்து பல வருடங்களாகி விட்டது. அதோடு, தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழியும் எனக்கு தெரியும். இருப்பினும், எனக்கான சம்பளம் ஆமை வேகத்திலேயே உயர்கிறது என்றும் பீல் பண்ணுகிறார் ப்ரியாஆனந்த்.