சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
வாமனன் படத்தில் ஜெய்யுடன் நடித்தவர் ப்ரியா ஆனந்த். அந்த படத்தின் தோல்வி காரணமாக அடுத்து கோலிவுட் படமில்லாமல் தெலுங்கு, இந்தி வரை சென்றார் ப்ரியா. ஆனால், எந்த மொழியிலும் அவரால் பரபரப்பான நடிகையாக முடியவில்லை. அதனால் மீண்டும் தமிழுக்கு வந்த அவர், 180, இங்கிலீஷ் விங்கிலீஷ், எதிர்நீச்சல் ஆகிய படங்களில் நடித்தார். இதில் எதிர்நீச்சல் படம் ப்ரியா ஆனந்தை பேச வைத்ததால், இப்போது அதிரடியாக சில படங்களை கைப்பற்றி விட்டார்.
இதனால் புதிய படங்களில் நடிக்க அவர் தனது படக்கூலியை ஒரு கோடியாக உயர்த்தி விட்டதாக செய்திகள் பரவியுள்ளன. ஆனால் இந்த செய்தியால் அதிர்ச்சியடைந்து போயிருக்கிறார் ப்ரியா ஆனந்த். காரணம், ஒரு கோடி ரூபாய் தந்தால்தான் நடிப்பேன் என்று கறாராக பேசும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய நடிகை இல்லை. இப்போதும் எனக்கென தயாரிப்பாளர்களாக என்ன சம்பளம் நிர்ணயிக்கிறார்களோ அதைத்தான் வாங்கிக்கொண்டு வருகிறேன் என்று சொல்லும் ப்ரியாஆனந்த், இன்னும் நான் 50 லட்சத்தைகூட தொடவில்லை என்கிறார்.
மேலும், சில நடிகைகளெல்லாம் வந்து ஓரிரு படங்களிலேயே கோடியை தொட்டு விடுகிறார்கள். ஆனால் நான் சினிமாத்துறைக்குள் வந்து பல வருடங்களாகி விட்டது. அதோடு, தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழியும் எனக்கு தெரியும். இருப்பினும், எனக்கான சம்பளம் ஆமை வேகத்திலேயே உயர்கிறது என்றும் பீல் பண்ணுகிறார் ப்ரியாஆனந்த்.