ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை |
வாமனன் படத்தில் ஜெய்யுடன் நடித்தவர் ப்ரியா ஆனந்த். அந்த படத்தின் தோல்வி காரணமாக அடுத்து கோலிவுட் படமில்லாமல் தெலுங்கு, இந்தி வரை சென்றார் ப்ரியா. ஆனால், எந்த மொழியிலும் அவரால் பரபரப்பான நடிகையாக முடியவில்லை. அதனால் மீண்டும் தமிழுக்கு வந்த அவர், 180, இங்கிலீஷ் விங்கிலீஷ், எதிர்நீச்சல் ஆகிய படங்களில் நடித்தார். இதில் எதிர்நீச்சல் படம் ப்ரியா ஆனந்தை பேச வைத்ததால், இப்போது அதிரடியாக சில படங்களை கைப்பற்றி விட்டார்.
இதனால் புதிய படங்களில் நடிக்க அவர் தனது படக்கூலியை ஒரு கோடியாக உயர்த்தி விட்டதாக செய்திகள் பரவியுள்ளன. ஆனால் இந்த செய்தியால் அதிர்ச்சியடைந்து போயிருக்கிறார் ப்ரியா ஆனந்த். காரணம், ஒரு கோடி ரூபாய் தந்தால்தான் நடிப்பேன் என்று கறாராக பேசும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய நடிகை இல்லை. இப்போதும் எனக்கென தயாரிப்பாளர்களாக என்ன சம்பளம் நிர்ணயிக்கிறார்களோ அதைத்தான் வாங்கிக்கொண்டு வருகிறேன் என்று சொல்லும் ப்ரியாஆனந்த், இன்னும் நான் 50 லட்சத்தைகூட தொடவில்லை என்கிறார்.
மேலும், சில நடிகைகளெல்லாம் வந்து ஓரிரு படங்களிலேயே கோடியை தொட்டு விடுகிறார்கள். ஆனால் நான் சினிமாத்துறைக்குள் வந்து பல வருடங்களாகி விட்டது. அதோடு, தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழியும் எனக்கு தெரியும். இருப்பினும், எனக்கான சம்பளம் ஆமை வேகத்திலேயே உயர்கிறது என்றும் பீல் பண்ணுகிறார் ப்ரியாஆனந்த்.