பைக் சாகசம் செய்து வீடியோ வெளியிட்ட பார்வதி | ஜன., 7ல் பாக்யராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம் ; ரஜினி பங்கேற்கிறார் | கோல்கட்டாவில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சிறந்த நடிகர் விருது | 30 வருடம் கழித்து கேரள துறைமுகத்திற்கு விசிட் அடித்த பம்பாய் படக்குழு | மறைந்த நடிகர் சீனிவாசனின் உண்மையான வயது என்ன? கிளம்பிய விவாதமும் தெளிந்த உண்மையும் | ஜெயிலர் 2வில் பெரிய ரோலில் நடிக்கிறேன் : சிவராஜ்குமார் | உம்மைப் பற்றி பேசாத நாளில்லை : கமல் | ஜனநாயகன் ஆடியோ விழாவில் அரசியல் பேசக்கூடாது : மலேசிய அரசு தடையாம் | ஜனவரி 23-ல் நெட் பிளிக்ஸில் தேரே இஸ்க் மே | ஜனவரி 9ல் ஜனநாயகன், ஜனவரி 10ல் பராசக்தி : என்னென்ன பிரச்னை ஏற்படும் தெரியுமா? |
வாமனன் படத்தில் ஜெய்யுடன் நடித்தவர் ப்ரியா ஆனந்த். அந்த படத்தின் தோல்வி காரணமாக அடுத்து கோலிவுட் படமில்லாமல் தெலுங்கு, இந்தி வரை சென்றார் ப்ரியா. ஆனால், எந்த மொழியிலும் அவரால் பரபரப்பான நடிகையாக முடியவில்லை. அதனால் மீண்டும் தமிழுக்கு வந்த அவர், 180, இங்கிலீஷ் விங்கிலீஷ், எதிர்நீச்சல் ஆகிய படங்களில் நடித்தார். இதில் எதிர்நீச்சல் படம் ப்ரியா ஆனந்தை பேச வைத்ததால், இப்போது அதிரடியாக சில படங்களை கைப்பற்றி விட்டார்.
இதனால் புதிய படங்களில் நடிக்க அவர் தனது படக்கூலியை ஒரு கோடியாக உயர்த்தி விட்டதாக செய்திகள் பரவியுள்ளன. ஆனால் இந்த செய்தியால் அதிர்ச்சியடைந்து போயிருக்கிறார் ப்ரியா ஆனந்த். காரணம், ஒரு கோடி ரூபாய் தந்தால்தான் நடிப்பேன் என்று கறாராக பேசும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய நடிகை இல்லை. இப்போதும் எனக்கென தயாரிப்பாளர்களாக என்ன சம்பளம் நிர்ணயிக்கிறார்களோ அதைத்தான் வாங்கிக்கொண்டு வருகிறேன் என்று சொல்லும் ப்ரியாஆனந்த், இன்னும் நான் 50 லட்சத்தைகூட தொடவில்லை என்கிறார்.
மேலும், சில நடிகைகளெல்லாம் வந்து ஓரிரு படங்களிலேயே கோடியை தொட்டு விடுகிறார்கள். ஆனால் நான் சினிமாத்துறைக்குள் வந்து பல வருடங்களாகி விட்டது. அதோடு, தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழியும் எனக்கு தெரியும். இருப்பினும், எனக்கான சம்பளம் ஆமை வேகத்திலேயே உயர்கிறது என்றும் பீல் பண்ணுகிறார் ப்ரியாஆனந்த்.