ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கவுண்டமணி-செந்தில் காமெடி அலை ஓய்ந்த பிறகு காமெடியில் கலக்கி வந்தவர் வடிவேலு. மற்ற காமெடியன்களை மாதிரி முன்னோடிகளை பின்பற்றாமல் தனக்கென ஒரு பாணியை பின்பற்றியதால் வேகமாக வளர்ந்தார் வடிவேலு. அவரது காலகட்டத்தில் பல காமெடியன்கள் நடித்து வந்தபோதும் வடிவேலுவே நம்பர்-ஒன் காமெடியனாக திகழ்ந்தார்.
ஆனால், எதிர்பாராத அரசியல் புயலில் சிக்கியதால் 2 ஆண்டு வனவாசம் மேற்கொண்ட வடிவேலு தற்போது கஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். சென்னையிலுள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட அரசு தர்பார் செட்டில் தற்போது தெனாலிராமன் கெட்டப்பில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்தநிலையில், வடிவேலுவின் ஆரம்பமே அதிரடியாக இருப்பதால், மார்க்கெட்டில் இருக்கும் சந்தானம் உள்ளிட்ட வளர்ந்து வரும் சில காமெடியன்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. காரணம், அடுத்தபடியாக காமெடியனாக நடிக்கவும் தயாராகி விட்ட வடிவேலு, தனது காமெடி இலாகாவையும் உசுப்பேத்தியுள்ளார். அதனால் மீண்டும் அவர் ரவுண்டு கட்டினால் தங்களது மார்க்கெட் சரிந்துவிடுமே என்ற அச்சத்தில் உள்ளனர்.