ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நயன்தாராவுக்கும், ஆர்யாவுக்கும் திருமணம் நடக்கப் போவதாக போலி அழைப்பிதழ் அனுப்பியதால் டைரக்டர் முருகதாஸ் மீது கோபத்தில் இருக்கிறாராம் நயன்தாரா. சில தினங்களுக்கு முன் பத்திரிகையாளர்களுக்கு ஒரு திருமண அழைப்பிதழ் வந்தது. அதில் ஆர்யா வெட்ஸ் நயன்தாரா என்ற ஆங்கில வாசகத்துடன் நயன்தாரா விரலில், ஆர்யா மோதிரம் அணிவிப்பது போல் படமும் அதில் இடம் பெற்று இருந்தது. இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாக தெலுங்கு டி.வி. சேனல்கள் செய்தி வெளியிட்டன. இதனால் திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து விசாரித்த போது ராஜா ராணி படத்தின் விளம்பரத்துக்கு அது வெளியிடப்பட்டது தெரிய வந்தது. இப்படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர். ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார். படத்தின் பப்ளிசிட்டிக்காகவும், டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்காகவும் அப்படி ஒரு திருமண அழைப்பிதழை ஏ.ஆர்.முருகதாஸ் அச்சிட்டு வெளியிட்டு இருந்தார். நயன்தாரா ஒப்புதலோடு இதை வெளியிட்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அவர் இதற்கு அனுமதி அளிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. போலி திருமண அழைப்பிதழ் விவகாரம் நயன்தாராவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளதாம். ஏ.ஆர்.முருகதாசை போனில் தொடர்பு கொண்டு சண்டை போட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.