மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
நான் விருதுக்கு ஆசைப்பட்டு படங்களில் நடிக்கவில்லை, என்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார். கார்த்தி நடிக்கும் ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தின் சூட்டிங் பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்ள வந்த நடிகர் கார்த்தி கிணத்துக்கடவு அருகே சிங்கராம்பாளையத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் காப்பகத்துக்கு சென்றார். அங்கு குழந்தைகளுடன் பேசி மகிழ்ந்த அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ஆல் இன் ஆல் அழகு ராஜா, பிரியாணி படங்களில் தற்போது நடித்து வருகிறேன். ஆல் இன் அழகு ராஜா படத்தின் சூட்டிங் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதேபோல் பிரியாணி படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடந்து வருகிறது. எந்த கேரக்டரிலும் நடிக்க தயாராக இருக்கிறேன். தேசிய அளவில் விருது பெற வேண்டும் என்ற எண்ணத்தில் நடிப்பதில்லை. நான் நடித்து வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் அமோக ஆதரவு தந்தாலேபோதும். அதுவே விருது கிடைத்த பெருமைக்கு சமமாகி விடும். பாடல்கள் இல்லாத படங்களில் ரசனை இருக்காது என்றார்.