ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
உதயம், சத்யா, ரங்கீலா, கம்பெனி, சர்க்கார், ரத்த சரித்திரா உள்ளிட்ட பரபரப்பு படங்களை தெலுங்கிலும், இந்தியிலும் இயக்கியவர் ராம்கோபால் வர்மா. மேற்படி படங்களில் ஒன்றிரண்டு தமிழிலும் டப் செய்யப்பட்டு சக்கை போடு போட்டது ஞாபகமிருக்கலாம். இவருக்கு நீண்ட நெடு நாட்களாக நேரடி தமிழ் படமொன்றை இயக்க வேண்டுமென்பது ஆசை, வெறி, லட்சியம் இப்படி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்! அதன் வெளிப்பாடாக "நான்தான்டா" என்ற படத்தை "எங்கேயும் எப்போதும்" சர்வானந்த்தை வைத்து இயக்கி வருவதாக சென்னையில் சமீபத்தில் நடந்த "நான்தான்டா" பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பட்டவர்த்தனமாக கூறினார் ராம்கோபால் வர்மா. உடன் "நான்தான்டா" படத்தின் தயாரிப்பாளர் தேவி ஸ்ரீ தேவி பிரசாத், ஹீரோ சர்வானந்த், ஹீரோயின் அனைகா சேத்தி உள்ளிட்டவர்கள் அவர் கூற்றை உண்மை என ஆகமாதிப்பது போல் அமர்ந்திருந்தனர்.
ஆனால் நிஜம், ராம்கோபால் வர்மா தெலுங்கு, இந்தியில் இயக்கும் "சத்யா பாகம்-2" படத்தின் தமிழாக்கம் தான் "நான்தான்டா" என்பது தான்! இதை கடைசிவரை மூச்சுவிடாத ராம்கோபால் வர்மா, என் படங்களில் ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் இருக்கும். இதில் பாடல்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன். அப்பாவியான தோற்றம் உள்ள சர்வானந்த் கிரிமினல் ஆக இருந்தால் எப்படி இருக்கும்? என்று சிந்தித்து உருவாக்கிய கதை இது. முழுக்க முழுக்க கிரைம் சப்ஜெக்ட்களுக்காக தமிழ்நாட்டுக்கு தகுந்தபடி ஒரு படம் எடுக்க வேண்டும என்பது என் நீண்டகால கனவு. அது நான்தான்டா படத்தின் மூலம் நிறைவேறி இருக்கிறது என்று ஒரு நேரடி தமிழ்ப்படம் மாதிரியே பில்டப் கொடுத்தார்.
சினிமான்னா கொஞ்சம் மிகைப்படுத்தலாம்! அதுக்காக முழுபூசணிக்காயை பிடிசோற்றில் மறைக்கலமா ராம்கோபால்ஜி.?!